கவிச்சோலை

இங்கு எனக்குப்பிடித்த கவிதைகள் சிலவற்றை தொகுத்து வைத்துள்ளேன். அத்துடன் நளினியின் கவிதைகள் சிலவற்றையும் சேர்த்துள்ளேன். படித்துப்பாருங்களேன்…

‘விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது -
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..

மனித நேயம் எங்கோ
பதுங்கிக்கொண்டபோது – வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன

ஒரு ஞாயிறு மாலை ய(ஜ)ன்னல் அருகிலிருந்து அ(ஆ)ப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில் லயித்து இருந்தேன்
சின்ன உடலில் என்ன வேகம் சிலிர்ப்பும் வாலின் விசுக்கலும் விடுவிடென அங்குமிங்கும் நோக்கலும் செயலில் முனைப்பும்
ஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில் எத்தனை பிஞ்சுகளோ…?

நிலாவைக் காட்ட நீண்டது விரல்
எவ்வளவு அழகான விரல்’ என்றான் ஒருவன்
‘நகம் முத்துச்சிப்பியைப்போல் இருக்கிறது’ என்று கவிதை புனைந்தான் ஒருவன்

மலரென்று உனை எண்ணி மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்

அஸ்தமனத்தை அறிவிக்கும் எங்கள் அதிகாலைகள்
பூபாளத்திற்கு பதிலாக முகாரியையே முன்வைக்கும்
பூமியில் கேட்கும் முழக்கங்களால்

உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய

சிரியுங்கள்…
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது…
அழுங்கள்…
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்…

அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்
தினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்

அகதிகள்

நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்

அறுவடை முடித்த வயல்கள் வெளிச்சோடின
ஒரு சிறங்கை மணிகூடக் கிட்டவில்லை நமக்கு.

காற்று அடித்ததுதான்
எடுத்துத் தூற்றவில்லையே எம் நெற்சூடு.

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது எடுத்துப்
பார்க்கிறேன்

நேற்றொரு “உலக்கையன்” ஊருக்குப் போய் வந்தான்
போய் வந்து … சொன்னான் ..
ஊரில் சனமெல்லாம் “சுதியாய்” இருக்குதெண்டான்
“சுதி” எண்டால்..? கேட்டது நான்.