உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.
ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.











