செய்திச்சிதறல்கள்

செய்தித்தளங்களிலிருந்து சில செய்திச்சிதறல்கள்..

உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.

ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு  தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.
ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன. மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.

ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

பூலோகமயமாதலின் விளைவாக நாளுக்குநாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக “கூகுள் பிளஸ்” என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.

“எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்”

- ஜூலியன்.

‘தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் ‘கூகுள் மீ’ என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு ‘அய்கன்” (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.