இரா.சம்பந்தனின் ஆக்கங்கள்

இவரது பல கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றில் சிலவற்றை இங்கு பிரசுரிப்பதில் ‘எழில்நிலா’ பெருமைப்படுகின்றது.
இவருடைய மற்றைய படைப்புக்களைப் படிக்க இங்கே செல்லுங்கள்.
http://www.sampanthan.com

காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன.

இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு.

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு மாதங்களிலே முடிந்தது. மகாபாரத யுத்தமும் பதினெட்டு நாட்கள் தான் நடந்தது. அது போல ஈழ யுத்தமும் மே பதினெட்டாம் திகதிதான் முடிந்து போனது! பதினெட்டுக்கு அப்படியொரு பெருமை போலும்!

தலைமை அழிந்தது! தளபதிகள் அழிந்தார்கள்! படைகள் அழிந்தன! மக்கள் அழிந்தார்கள்! சிலர் மண்டியிட்டார்கள்! இன்னும் சிலர் காட்டிக் கொடுத்தார்கள்! பலர் கைதானார்கள்! உண்மைதான்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள்.

இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்.

இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

இதுதான் காதல்

தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!