<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எழில்நிலா.காம்</title>
	<atom:link href="http://ezilnila.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://ezilnila.com</link>
	<description>தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம்</description>
	<lastBuildDate>Sat, 27 Apr 2013 22:22:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5</generator>
		<item>
		<title>திருப்பிக் கட்டமுடியுமா?</title>
		<link>http://ezilnila.com/archives/2038</link>
		<comments>http://ezilnila.com/archives/2038#comments</comments>
		<pubDate>Sat, 27 Apr 2013 22:09:30 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[பொதுவான கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=2038</guid>
		<description><![CDATA[உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன் . பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்  போன்றவை இன்னும் வழிபாட்டு இடங்களாக தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆனால் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/archives/2038/landmine" rel="attachment wp-att-2039"><img class="alignleft size-full wp-image-2039" alt="landMine" src="http://ezilnila.com/wp-content/uploads/landMine.jpg" width="150" height="150" /></a>உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன் . பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், <span id="more-2038"></span>மயிலை கபாலி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்  போன்றவை இன்னும் வழிபாட்டு இடங்களாக தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன.<br />
ஆனால் கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில்கள் சிவன், விஷ்ணு கோவில்களாகத் தொடங்கி பௌத்த கோவில்களாக மாறி சில நூறு வருடங்களிலேயே சிதிலமடைந்து, சிற்பங்கள் மேலை நாட்டினரால் கொள்ளையடிக்கப்பட்டு, பின் தொடர்ந்து நடந்த பல்வேறு  யுத்தங்களால் கவனிப்பாரற்று மேலும் பாழாகின. சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் இந்தக் கோவில்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் நிதி உதவியுடன் யுனெஸ்கோ வழிகாட்டுதலில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.</p>
<p>அடர்ந்த மரச் சோலைகளின் நடுவே இருக்கும் அகழிகளும் கோட்டைச் சுவர்களுமாக இருக்கும் இந்தக் கோவில் இடிபாடுகளில் கம்போடிய சமூகத்தின் ஒரு காலத்தைய வளமும், செழிப்பும், கலைத்திறனும் பளிச்சிடுவதைப் போலவே, கோவில் வளாகத்திலும், வெளியே சியாம் ரீப் நகரின் ஒவ்வொரு சந்திலும் மூலையிலும் கடைத்தெருவிலும் கம்போடியாவின் இன்றைய கொடூரமான ஏழ்மை முகத்தில் அறைகிறது. ஆஸ்திரேலியா முதல் கனடா வரையிலான சுற்றுலா பயணிகள் இடிந்த இந்து/பௌத்த கோவில்களைக் காண வரவில்லையென்றால் இந்த நகரம் முழுக்க செத்துப் போய்விடும்.</p>
<p>உள்ளூரில் எதற்கும் கம்போடிய ரியாலை யாரும் விரும்புவதில்லை. அமெரிக்க டாலர் மட்டுமே பெரிதும் புழங்குகிறது. ஒரு டாலருக்கு நான்காயிரம் ரியால் !  கம்போடியாவில் எந்த பெரும் தொழில் உற்பத்தியும் இல்லை. ஓடும் எல்லா கார்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நகரத்தில் பஸ் வசதியே கிடையாது. மொப்பெடுக்குப் பின்னால் டிராக்டர் டிரெய்லர் போல சீட் வைத்த இணைப்பைக் கட்டிக் கொண்டு டுக்டுக் என்ப்படும் ஆட்டோகள் மட்டுமே ஓடுகின்றன. 90 சத விகித மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். எல்லாரும் டூரிஸ்ட்டுகளை நம்பி இருக்கிறார்கள்.</p>
<p>கடும் வெயிலில் கோவில் இடிபாடுகளை பல கிலோமீட்டர் நடந்து நடந்து சுற்றிப் பார்த்தபோது அவை என்னைக் கவர்ந்ததை விட, அதிகமாக என் கவனத்தை ஈர்த்தது வேறொன்றுதான். கோவில் வளாகத்துக்குள் பல்வேறு கம்போடிய இசைக் கருவிகளை உட்கார்ந்து இசைத்தபடி, டூரிஸ்ட்டுகளிடம் மௌனமாக பிச்சை கேட்டுக் கொண்டிருந்த  குழு ஒன்றைப் பார்த்தேன். அன்றிரவு நகரத்துக்குள் டூரிஸ்ட்டுகள் அதிகம் புழங்கும் பப் ஸ்ட்ரீட், நைட் மார்க்கெட் பகுதியில் நடுத்தெருவில் இதே போன்ற இன்னொரு குழுவைப் பார்த்தேன்.</p>
<p>இந்த இசைக் குழுக்களில் இருப்போர் பலரும் கம்போடியாவில் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க, ரஷ்ய, சீன ஆயுத உதவியுடன் வெவ்வேறு இயக்கங்கள் நடத்திய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் எல்லாரையும் பாதித்தது யுத்தத்தின் ஒரே அம்சம்தான். பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள்.  சண்டையிடும் எதிரெதிர் அணிகள் இன்னொரு அணி தம்மை நெருங்க விடாமல் தடுக்க மாறி மாறி நிலமெங்கும் கண்ணி வெடிகளைப் புதைத்திருக்கின்றன. சண்டை முடிந்தாலும், கண்ணி வெடிகளை அகற்றும் வேலை முடியவில்லை.</p>
<p>எங்கெல்லாம் கண்ணி வெடி புதைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபமல்ல. அரசாங்கத்தின் ராணுவங்கள் கண்ணி வெடியைப் புதைக்கும்போதே அதைப் பற்றிய வரைபடம் தயாரித்துக் கொள்ளவேண்டும். கெரில்லா அமைப்புகளும் வரைபடம் வைத்திருப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் இரு தரப்பினரின் பாசறைகளும் தளவாடங்களும் அழிக்கப்படும்போது இந்த வரைபடங்களும் அழிந்துவிடும். ராணுவத்தின் வரைபடத்தின் பிரதி வேறு நகரில் தலைமையகத்தில் இருக்கும் வாய்ப்பு உண்டு. போராளி அமைப்புகள் அழியும்போது எல்லா தகவல்களும் சேர்ந்தே அழியும் வாய்ப்பே அதிகம்.</p>
<p>இந்தக் கண்ணி வெடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தெரியாமல் காலை வைத்து உறுப்புகளை இழந்து நடைப்பிணங்களாக வாழ்வோர் நிலை மிக பரிதாபகரமானது.  கம்போடியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்படி கை கால் இழந்தவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர்தான் பாட்டு பாடி டூரிஸ்ட்டுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.</p>
<p>கண்ணி வெடி விபத்தில் பாதிக்கப்படுவோருக்கான் நியாயத்தை யாரிடமும் போய் கேட்கமுடியாது. போரில் பாலசந்திரன் போன்ற குழந்தைகளை சுட்டுக் கொன்றதற்காக இலங்கை ராணுவத்தைப் போர் குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் கண்ணி வெடி விபத்தில் கை கால் இழந்த சிறுவர்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று எந்த தரப்பையும் தனியே அடையாளம் காட்ட முடியாது. ( இந்த வாசகத்தைத்தான் கண்ணி வெடி பாதிப்புக்குள்ளானோருக்கான இணைய தளம் ஒரு சிறுவ்ன படத்துடன் சொல்கிறது:  இந்த சிறுவன் வேறு விதமாக இந்த நிலைக்கு ஆளாகியிருந்தால் அதற்கு யாரையாவது பொறுப்பாக்கமுடியும். ஆனால் கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டால், அதற்கு பொறுப்பு என்று யாரையும் நீதிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி நியாயம் கேட்க இயலாது.)</p>
<p>கம்போடியாவில் கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள்தான். சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கே காட்டில் சுள்ளி பொறுக்கச் செல்பவர்களும், வியட்நாம் யுத்தத்தின்போதும் உள்ளூர் யுத்தத்தின்போதும் போடப்பட்ட குண்டுகளின் உலோகக் கவசங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து விற்றுப் பிழைக்கச் செல்வோரும் கண்ணி வெடியாலும் இன்னும் வெடிக்காமல்  இருக்கும் சில க்ளஸ்ட்டர் குண்டுகளாலும் உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.</p>
<p>பெருமளவில் கம்போடியாவில் கண்னி வெடிகளும் குண்டுகளும் வயல்களிலிருந்து நிலங்களிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் அகற்றப்பட்டாலும் இன்னும் சுமார் 60 லட்சம் கண்ணி வெடிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள்.  கண்ணி வெடியை அகற்றுவது எளிதானதும் மலிவானதும் அல்ல. ஒரு கண்ணி வெடியைப் புதைக்க ஆகும் செலவு வெறும் மூன்று டாலர்தான். அகற்றுவதற்கு ஒரு வெடிக்கு சுமார் 1200 டாலர் செலவு ஆகிறது. வருடந்தோறும் சுமார் மூன்று கோடி டாலர் கண்ணி வெடி அகற்ற மட்டும் உலக நாடுகளின் நன்கொடை மூலம் செலவிடப்படுகிறது. இதே நிதி உதவி நீடித்தால், மொத்த கண்ணி வெடிகளையும் அகற்றி முடிக்க 15 முதல் 20 வருடம் ஆகும் என்கிறார்கள். அதுவரை அந்த நிலங்களில் விவசாயம் செய்யமுடியாது.</p>
<p>கம்போடியாவில் கண்ணி வெடி வைத்தவரே கண்ணி வெடிக்கு எதிராக இயக்கம் நடத்தி செயல்பட்டு வருகிறார். அவர் பெயர் அக்கி ரா. ஆறு வயதில் அவர் பெற்றோர் கெமர் ரௌஜ் எனப்படும் இடதுசாரி தீவிரவாதப் போராளி அமைப்பால் கொல்லப்பட்டனர். அவரை அமைப்பே எடுத்து வளர்த்தது. பத்து வயதிலேயே அந்த அமைப்பின் போர்வீரராக்கப்பட்டார் ரே. பின்னர் 16 வயதில் எதிரிகளான வியட்நாம் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதும், அந்த ராணுவத்தின் படை வீரராக்கப்பட்டார். இப்படி குழந்தை சிப்பாயாக இருந்தது முதல் யுத்தம் முடியும்வரை ரே தானே ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்திருக்கிறார். தொண்ணூறுகளின் இறுதியில் யுத்தம் ஓய்ந்ததும், ரே கண்ணி வெடிகளுக்கு எதிரானவராகவும் யுத்த எதிர்ப்பாளராகவும் மாறி இதுவரை 50 ஆயிரம் கண்ணி வெடிகளை தானே அகற்றியிருக்கிறார்.</p>
<p>தானே எந்த நவீன உபகரணமும் இல்லாமல், வெறும் குச்சிகளை வைத்துக் கொண்டு வெடி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அகற்றும் திறமையுடையவர் ரே. உலகம் முழுவதும் கண்ணி வெடி அகற்றலில் ஈடுபடும் அமைப்புகள் அவருக்கு இதற்கான நவீனப் பயிற்சி கொடுத்து தொடர்ந்து அவரைப் பயன்படுத்துகின்றன. ரேவை சிஎன்என் டிவி 2010ன் தலை சிறந்த மனிதராக அறிவித்தது. அவர் வாழ்க்கை இப்போது ஒரு படமாக்கப்பட்டுவருகிறது.</p>
<p>அக்கி ரே கண்ணி வெடி ஆபத்து பற்றி விளக்குவதற்கென்றே ஒரு தனி மியூசியத்தை சியாம் ரீப் நகரில் வைத்துள்ளார். அங்கே சென்று சுற்றிப் பார்த்தேன். அதில் சொல்லும் தகவல்கள் எல்லாம் பெரும் கவலை அளிக்கின்றன.</p>
<p>உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை இனி வைக்கக்கூடாது, முழுக்க நீக்கிவிடவேண்டும் என்று ஐ.நா மூலம் கனடா ஒட்டாவா நகரில் ஒப்பந்தம் 1997ல் போடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு 167 நாடுகள்  கையெழுத்திட்டன. இவை தம்மிடம் உள்ள கண்ணி வெடிகளை எல்லாம் அழித்துவிட ஒப்புக் கொண்டன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா , இன்னும் பல சிறு நாடுகள் இவை.</p>
<p>கையெழுத்து போட மறுக்கும் நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, இஸ்ரேல், ஐக்கிய அரபு நாடு, பாகிஸ்தான்ஸஸ.. இந்தியா ! இன்னும் கண்ணி வெடிகள் தயாரித்து விற்கும் மிகச் சில நாடுகளில் ஒன்று இந்தியா ! இந்தியன் என்பதற்காக நான் வெட்கப்படும் விஷயங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று..</p>
<p>கம்போடியாவிலிருந்து திரும்பும் வழியெல்லாம் என் மனம் இலங்கையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. அக்கி ரே போல அங்கிருந்து யாரேனும் வெளிப்பட்டு வருவார்களா ? யாழ்ப்பாணமும், கிழக்கும், வன்னியும் இன்னமும் கண்ணி வெடிகளால் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக வன்னியின் செழுமையான வயல்களில் வேளாண்மை செய்யவே முடியாதபடி அவற்றில் நாற்றுக்கு பதிலாக கண்ணி வெடிகளை விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவமும் விதைத்து வைத்திருக்கிறார்கள்.</p>
<p>மண்ணில் விழுந்தால் மறுபடி விதையாக முளைப்போம் என்பது கண்ணி வெடிக்குப் பொருந்தாது. மண்ணில் நடப்போரை சவமாக ஆக்கும் விதை அது. மொத்தம் 640 கிராமங்கள் கண்ணிவெடிகளால் வீணாக்கப்பட்டு கிடக்கின்றன.முப்பது வருடங்களில் கண்ணி வெடிகளால் மட்டும் சுமார் 20 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரும்,  12 ஆயிரம் விடுதலைப்புலிகளும் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு சொல்கிறது. . கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் ( சுமார் 400 கோடி இந்திய ரூபாய்) கண்ணி வெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பகுதிதான் பாக்கி என்றும் 90 சதவிகித கண்ணி வெடிகளை அகற்றியாகிவிட்டது என்றும் அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றன. சரியான கணக்குகள் எதற்கும் கிடையாது. தமிழர் பகுதிகளில் இன்னும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமலே இருக்கிறது என்கிறார்கள்.</p>
<p>கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் ( சுமார் 25000 இலங்கை ரூபாய் அல்லது 12500 இந்திய ரூபாய்). இந்த வேலையும் இல்லாவிட்டால், இந்தப் பெண்கள் இன்னும் கோரமான வறுமையில் துயர்ப்படுவார்கள். முதலில் இயந்திரம் மேல் மண்ணை அகற்றும். பின்னர் மூன்றடிக்கு மூன்றடி சதுரத்தில் பெண் கூலிகள் ஆறு அங்குல ஆழம் வரை தோண்டவேண்டும். கண்ணி வெடியின் தலை தெரிந்ததும், தோண்டுவதை நிறுத்தி ராணுவ வீரரிடம் சொன்னால் அவர்கள் அடுத்து வந்து அதை அகற்றுவார்கள்.</p>
<p><strong>கம்போடியா பற்றி அறியும் எவரும் இலங்கைத் தமிழர்களை மறுபடியும் ஆயுதம் எடுத்து யுத்தம் நடத்தும்படி ஒருபோதும் தூண்டமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனித நேயத்தையும் இன உணர்வையும் நான் நிச்சயம் நம்பமாட்டேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. அது தீர்த்துக் கட்டுவது மனிதர்களின் வாழ்க்கையை மட்டும்தான்.</strong></p>
<p><strong>இடிந்த அங்கோர் வாட் கோவில்களை திரும்பக் கட்டிவிடமுடியும். ஆனால் சிதைந்த வாழ்க்கைகளை – அது தமிழரானாலும் சிங்களவரானாலும், கம்போடியரானாலும், வியட்நாமியரானாலும் ஒருபோதும் நம்மால் திருப்பிக் கட்டவே முடியாது.</strong></p>
<p>நன்றி: ஞானி</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/2038/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மறுஜென்மம்</title>
		<link>http://ezilnila.com/archives/2032</link>
		<comments>http://ezilnila.com/archives/2032#comments</comments>
		<pubDate>Sun, 21 Apr 2013 16:54:59 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[பிறைனாவின் ஆக்கங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=2032</guid>
		<description><![CDATA[அம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி, “என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா” கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள், தாயும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு சென்று விட்டா. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/archives/2032/girl" rel="attachment wp-att-2033"><img class="alignleft size-full wp-image-2033" alt="girl" src="http://ezilnila.com/wp-content/uploads/girl.jpg" width="150" height="150" /></a>அம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி,<br />
“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”<br />
கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள், <span id="more-2032"></span>தாயும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு சென்று விட்டா. சிறிது நேரத்திற்க்குப் பின் அம்மா வந்து பார்த்தபோது, அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். சிறிது நாட்களாகவே இவளைக் கவனித்துக் கொண்டு வருகிறாள்.<br />
“கயல் உனக்கு ஏதாவது பிரச்சினயா?, உன்ர றிப்போட்டும் நேற்றுப் பாத்தன், எல்லாத்துக்கும் சரியான குறைவு, இதுவரைக்கும் நீ இப்பிடி மார்க்ஸ் எடுத்ததில்லயே.&#8221;<br />
&#8220;உன்ர ரீச்சர நேற்றுக் கண்டன், அவ என்னட்ட கேக்கிறா, வீட்ட ஏதாவது பிரச்சினயா எண்டு, நான் அப்பிடியெல்லாம் இல்ல, ஏன் அப்பிடி கேக்கிறீங்க என்டதுக்கு, கயல் இப்ப முந்தின மாறி இல்ல, படிப்பில சரியான வீக்கா போனா, கிளாஸ்ல படிப்பிக்கிறதக் கூட சரியாக் கவனிக்கிறேல, எதையோ யோசிச்சிக் கொண்டே இருப்பா அதுதான் நான் அப்பிடிக் கேட்டன் என்டா, நான் ஒருமாரிச் சமாளிச்சிட்டு வந்திட்டன்”<br />
“இப்ப எல்லாத்தயும் யோசிச்சுப்பாத்தா உனக்கு ஏதோ பிரச்சின இருக்கு, சொல்லு கயல், என்ன என்டாலும் பறவாயில்ல, உன்ட அப்பா பாத்துக்குவார், உனக்குத்தான் அவரப்பற்றித் தெரியுமே, உனக்கு ஒன்டென்டா அவர் தாங்கமாட்டார். அவருக்கு என்டு இந்த ஊரில நல்ல மரியாத இருக்கு, அவற்ற மரியாதய கெடுக்கிற மாதிரி ஏதும் நீ செய்திடாத”<br />
“என்ன பிரச்சின என்டாலும் மனசு விட்டுச் சொல்லு.”அம்மா நீளமாய் அறிவுரை சொல்ல, சிரித்தபடி எழுந்த கயல் அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி,<br />
“ஐயோ அம்மா, நீங்க நினைக்கிறமாதிரி எனக்கு ஒரு பிரச்சினயும் இல்ல, சும்மா மனசப் போட்டு குழப்பிக்காதேங்கோ. எனக்கு ஏதும் பிரச்சின என்டா உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறன், நீங்கதான் என்ர செல்ல அம்மா ஆச்சே. என்ன எனக்கு இப்ப படிக்கிறதில கொஞ்சம் பஞ்சி பிடிச்சிட்டு, எனி நல்லாப் படிக்கிறன் அம்மா”<br />
“ நீங்க கவலப்படாதேங்கோ. எப்பவும் உங்கட மரியாதய கெடுக்கிறமாதிரி இந்தக் கயல் நடந்துக்கவே மாட்டா, போதுமா?”“சரி அத விடுங்கோ. நீங்க போய் கயல் குட்டிக்கு சாப்பாடு செய்வீங்களாம், நான் போய் குளிச்சிட்டு வருவனாம்.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.<br />
கயல் அந்தப் பரம்பரையிலேயே முதல் பெண் வாரிசு என்பதால் எல்லோருக்கும் சரியான செல்லம். கயலின் தந்தை அவள் மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து அவளுடைய நண்பர்கள் பொறாமைப்படுவார்கள். ஆனால் கயலின் முகமோ எப்போதும் சோகம் கலந்ததாகவே இருக்கும்.<br />
அன்று ஞாயிற்றுக்கிழமை, பாடசாலை விடுமுறையென்பதால் அவளின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஆனால் அவளோ வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். நண்பர்கள் வந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை.<br />
“கயல்&#8230;&#8230;..!”அவர்கள் ஒன்றாகக் கத்த அவள் திடுக்கிட்டு நினைவுக்கு வந்தாள்.“கயல், நீ ஏன்டீ எப்ப பாத்தாலும் மூஞ்சய தொங்கப்போட்டுக் கொண்டே இருக்கா, உனக்கு என்ன குறை சொல்லு பாப்பம், இப்பிடி ஒரு வசதியான வாழ்க்கையும், பாசமான நல்ல அப்பா, அம்மாவும் கிடைக்க நீ குடுத்துவச்சிருக்கனும். லைவ்வ சும்மா என்ஜோய் பண்ணுவியா, அத விட்டிட்டு எப்ப பாத்தாலும்” வித்யா சொல்லி முடிக்க முன்னதாகவே அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.<br />
“கயலுக்கு என்ன நடந்திச்சு, நானும் இப்ப கொஞ்ச நாளாப் பாக்கிறன், அவளின்ட போக்கில நிறைய வித்தியாசமிருக்கு” தனு கூறினாள் அதற்கிடையில் அவளை இடைமறித்த அகிலா,<br />
“என்ன வித்தியாசத்த நீ அவளிட்ட கண்டுபிடிச்சனீ? சும்மா போ, அவள் முந்தி தொடக்கமே இப்பிடித்தானே, அவளுக்கு உந்த பணக்கார வாழ்க்க பிடிக்கல, சாதாரண வாழ்க்கயதான் விரும்பிறாள், அத எத்தினயோ தடவ நம்மகிட்டயும் சொல்லி இருக்காள், எனக்கென்டா அவள் அதால தான் எப்பவும் கவலையாவே இருக்காள் என்டு தோணுது, நீ சும்மா எல்லாம் கற்பன பண்ணாத” என்றாள்.<br />
அதற்கு தனுவும் தலை அசைத்துவிட்டு,<br />
“சரி நீ சொல்லிறதாவே வச்சுக்குவோம், உங்கள் எல்லாருக்கும் தெரியும் கயல் தான் நம்மட கிளாஸ்லயே ஒவ்வொரு ரேமும் முதலாம் பிள்ளயா வாறவள், ஆனா கடசி ரேம் அவள்தான் கடசி பிள்ள, இதுக்கு சான்சே இல்ல, அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சினையிருக்கு என்டது இதிலயே புரியல”. அவள் சொல்லி முடிக்க, எல்லோரும் “ம்..ம்.. நீ சொல்லிறதும் சரிதான்” என்று ஆமோதித்தனர்.<br />
இவர்கள் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அங்கு வந்த கயல், “சரி சொல்லுங்கடீ, எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்க? ஒரே தலயிடியா இருந்திச்சு, அதுதான் போய் முகம் கழுவீற்று வந்தனான். ஏய் நாம விளயாடி நிறய நாளாச்சு, ஏதாவது விளயாடுவமா?” “ஏய் கயல் விளயாடுறத விடு, உனக்கு என்ன பிரச்சின அத முதல்ல சொல்லு. ஒரு பிரச்சினயும் இல்ல என்டு மட்டும் பொய் சொல்லாத, உன்ர முகம்தான் றொம்ப நல்லாக் காட்டிக் கொடுக்குதே. ஒன்டு  மட்டும் புரிஞ்சுக்கோ, சந்தோசத்தயும் கவலையையும் பகிர்றதுதான் உண்மையான ப்ரண்ட்சிப். இதுக்கு மேலயும் நாம உன்னக் கட்டாயப் படுத்த விரும்பல, விரும்பினா சொல்லு. ஆனா யாரிட்டயாச்சும் மனசுவிட்டு கதடீ, அப்பதான் உனக்கும் ஒரு ஆறதலா இருக்கும்,” என்றால் தனு. கயல் அழுதபடி, &#8220;என்ன மன்னிச்சிருங்கடீ, நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதையும் மறச்சதில்ல, ஆனா இத எப்பிடி உங்ககிட்ட சொல்லிறதினு எனக்குத் தெரியல, வாயெல்லாம் கூசுது, அம்மாக்குக் கூட இத நான் சொல்லல, என்ர மனசிலயே வச்சிக்கிட்டு, ஒவ்வொரு நாளும் செத்திக்கிட்டு இருக்கன். நீங்க இவ்வளவு தூரம் கேக்கிறதால சொல்லிறன், யாருக்கிட்டயும் சொல்ல மாட்டன் என்டு எனக்கு சத்தியம் பண்ணித்தரனும், ஓகேயா!&#8221; எல்லோரும் “இல்லக் கயல், சத்தியமா நாம யாருக்கிட்டயும் சொல்லமாட்டம், நீ தைரியமாச் சொல்லு கயல்” என்றனர்.<br />
கயல் எல்லாவற்றையும் சொல்ல, எல்லோரினது கைகளும் வாயில்.  “கயல், நீ இவ்வளவு சோதனைக்குள்ள வாழிறாயா? நாம நினச்சுக்கூடப் பாக்கல.கடவுளே இப்பிடியும் இருக்கினமா மனுசர்? சிக், இப்பிடிப் பட்ட மனுசர நிக்கவச்சு சுடனும்.” என்றாள் அகிலா.<br />
“ஏய் கயல்!  இதில இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு, நீ பேசாம இந்த ஊர விட்டு எங்கயாவது போயிடு கயல். இதச் சொல்ல கஸ்ரமாத்தானிருக்கு,  ஆனா உனக்கு வேற வழியில்ல கயல். யோச்சு முடிவெடு, ஏதும் உதவி வேணுமென்டா சொல்லு. நாங்க உன்கூட எப்பவும் இருப்பம், கடவுள்கிட்ட உனக்காக ப்றே பண்ணிறம், நிச்சயம் நல்ல வழிகாட்டுவார். சரி கயல் நேரமாச்சு, நாங்க போட்டுவாறம்!&#8221; என வித்யா சொல்லிமுடிக்க, எல்லோரும் புறப்பட்டுவிட்டார்கள்.</p>
<p>அன்று அவள் பல்கனியிலிருந்து அழுது கொண்டே இருந்தாள், இருட்டியது கூட அவளுக்குத் தெரியவில்லை, அப்போது யாரோ வரும் நிழல் கண்டு, பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அது வேறு யாருமில்லை, அவளுடைய தந்தை.<br />
“என்ன கயல் இந்த நேரத்தில இங்க இருக்கா, அதுவும் பனி வேற கொட்டுது, போ, போய் படு செல்லம், காலம ஸ்கூல் போகனும் எல்லா” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.<br />
காலை விடிந்ததும் வீட்டுக்காரர் கயலை எங்கு தேடியும் அவளைக் காணமுடியவில்லை. முடியாத கட்டத்தில் பொலிஸிடம் சென்று முறையிட்டனர், அவர்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தார்கள். இது மெதுவாக ஊர் மக்களிடம் கசியத்தொடங்க அவர்கள் கயலைப் பற்றித் தவறாகப் பேச ஆரம்பித்தார்கள்.<br />
கயல் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில்&#8230;.!<br />
அவள் இதுவரைக்கும் தனியாக எங்கும் சென்றது கிடையாது. அதனால் இடம் வலம் தெரியாமல் தடுமாறிப் போய் நின்றாள்,திடீரென்று ஏதோ யோசனை வந்தது போல் மன்னார் பேரூந்தில் ஏறி உட்கார்ந்து விட்டாள். ஆனால் அவளின் முகத்தில் பயமோ தெளியவில்லை, சுற்றி யாரும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு, யாருமில்லை என்று பெருமூச்சு விட்டாள்.<br />
கடவுளின் நாமத்தை உச்சரித்தபடியே இருந்தாள்.<br />
திடீரென்று பஸ்ஸுக்குள் தனது தகப்பனும், அவருடன் கொஞ்சப்பேரும் வருவதை கண்ட கயல், ‘கடவுளே, இது என்ன சோதன, எப்பிடி தப்பிக்கப் போறனோ, என்ன காப்பாத்துங்க கடவுளே’, என்றபடி தலையை மடியில் வைத்த படி இருந்தாள். ஆனால் தகப்பனின் கண்களில் கயல் அகப்பட்டுவிட்டாள். “ஏய் கயல் நீ இங்க தானா இருக்கிறா,  உன்ன அவ்வளவு லேசில விட்டிடுவனா என்ன!” சரி வா வீட்ட போவம்.&#8221;<br />
கயலின் கையைப் பற்றி இழுத்தபடி தந்தை!<br />
ஆனால் கயலோ “ஐயோ அப்பா என்ன விட்டிடுங்கோ, நான் வரமாட்டன், என்ன வாழவும் விடிறீங்க இல்ல, சாகவாச்சும் விடிங்களன், யாராவது என்ன  காப்பாத்துங்களன், ப்ளீஸ் இந்த ஆளிட்ட இருந்து என்ன காப்பாத்துங்கோ” என கத்தினாள். தட்டிக்கேட்க வந்தவர்களிடம் “இது தேப்பனுக்கும் மேளுக்கும் இடயில நடக்கிற பிரச்சின, இதில நீங்க யாரும் தலயிட வேண்டாம்” என்றார் தகப்பனுடன் வந்த ஒருவர்.<br />
கயல் “யாரு இவரா என்ர அப்பா, அப்பா என்ற வார்த்தய கேவலப்படுத்தாத. என்ர அப்பா எப்பயோ செத்திட்டார்.”<br />
“மேள், மேள்..  நான் இதில உட்காரலாமா? மன்னிச்சிரு புள்ள, உன்ர நித்திரயக் குழப்பீற்றனாக்கும். நான் இதில உட்காரலாமா மேள்?” என்று கேட்டார். அவளும் சற்றுத் தயக்கத்துடன் தள்ளியிருந்தாள். ‘கடவுளே என்கூட இருங்கோ, என்ன காப்பாத்துங்கோ’என்றபடி மனதிற்குள் கடவுளை வேண்டியபடி இருந்தாள்.<br />
அருகில் இருந்தவரை ஒருக்கா திரும்பிப் பாத்தவள், ‘ஐயோ இவர எங்கயோ பாத்தமாறியிருக்கே. யாரா இருக்கும், முகத்தப் பாத்தா ஏதோ கன நாள் பழகினமாறி இருக்கு, ஹ்ம், ஆனா யாரென்டுதான் தெரியல, சரி யாராவும் இருந்திட்டு போகட்டும், என்ன யாருனு கண்டுபிடிக்காட்டிச் சரி’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அவர் “நீ கயல் தானே? உனக்கு என்ன யாருன்னு தெரியுதா?” விழிபிதுங்கிய நிலையில் கயல்! &#8216;ஐயோ கடவுளே! இந்த ஆள் என்ன என்ர பெயரையே சொல்லுறார், அப்ப நான் நினச்சது சரிதான் போல, இவர் தெரிஞ்ச ஆள்தான், சந்தேகமே இல்ல, அப்பிடினா அப்பாகிட்ட போய் சொல்லிடுவாரே, இப்ப என்ன செய்வம், ஏதாவது யோசி கயல், யோசி&#8230;.<br />
ஆ, ஒரு ஐடியா, பேசாம ‘யாரு கயல்?, நீங்க வேற யாரோ என்டு நினச்சு என்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறியள் போல என்டு சொல்லிப் பாப்பம்&#8217; இப்படி கயலின் மைன்ட்வொய்ஸ் அலாரம் அடித்தது.<br />
ஆனால் கயலை முந்திக்கொண்டு, “என்ன கயல் கனக்க யோசிக்கிறாய், என்ன மறந்திட்டியா? உனக்கு நெட்டிலிப் பிள்ளையார் கோயில் ஞாபகமிருக்குதா? இப்ப ஒரு ஏழு வருசத்திற்கு முன்னம் நான் அந்தக் கோயில்ல குருக்களா இருந்தன், அப்ப உன‌க்கு வயசு ஒரு பத்து இருக்கும்னு  நெனக்கிறன். நீ அங்க ஒவ்வொரு நாளும் வந்து என்ன கூப்பிட்டு, என‌க்கு சொன்னா கடவுளிட்ட போய் சேரும்னு நெனச்சு, எல்லாப் பிரச்சினயும் சொல்லி அழுவியே, அது விசியமா நான் உன்ர அப்பாகிட்ட கதச்சன், அது பெரிய பிரச்சினயாப் போய், நான் ஊர விட்டிட்டே வந்துட்டன்.&#8221;<br />
&#8220;இப்ப நானும் என்ர மனுசியுமா மன்னாரிலதான் இருக்கம். என்ன மன்னிச்சிருமா, உன‌க்கு என்னால உதவி செய்யேலாமப் போச்சு. ஆ, இப்ப ஞாபகம் வந்திச்சோ இல்லயோ.&#8221;<br />
கயல்,“ஐயா நீங்களா? இந்த உலகில நேசிக்கிற, மதிக்கிற ஒரு ஆள் நீங்க, உங்களயே மறந்திட்டனே” இரு கைகளையும் கூப்பியபடி தனது கதையையும் சொல்லி முடித்தாள் கயல்.<br />
ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் அந்த ஐயர். அவரின் கண்களில் கோபமும், ஆவேசமும் தெரிந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “நீ கவலப்படாத புள்ள, நீ நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறா, உன‌க்கு எந்தப் பயமும் வேணாம், நீ எந்த நம்பிக்கையில வெளிக்கிட்டியோனு என‌க்கு தெரியல, ஆனா எனி உன‌க்கு நானிருக்கன். “<br />
“என்ன உன்ர அப்பாவா நெனச்சுக்கோ. எனக்குக்கு புள்ள இல்லனு நான் எத்தனயோ தடவ கடவுள்கிட்ட அழுதிருக்கன், அவர்தான் உன்ன என்கிட்ட அனுப்பியிருக்காரு”<br />
“என்ர மனுசி உன்ன கண்டா றொம்ப சந்தோசப்படுவாள், நீ அவள அம்மானு கூப்பிடு, அந்த வார்த்தயக் கேக்கிறதுக்காகவே அவள் நிறய நாளா காத்திருக்காள்.”<br />
“ஆனா ஐயா நீங்க ஆச்சாரமான பிராமண குடும்பத்த சேந்தனீங்க, நான் உங்க கூட வந்திருந்தா உங்களப் பற்றி எல்லோரும் தப்பாக் கதைக்க மாட்டாங்களா?”<br />
“கயல் நீ முதல்ல நம்ம ஆத்துக்கு வா, யாரு என்ன கதச்சாலும் என‌க்கு கவலையில்லை. நான், நீ, என்ர மனுசினு நாம‌ சந்தோசமா இருக்கலாம். சரி எழும்பு புள்ள, வீடு வருது, இறங்குவம்.” வீட்டிற்கு வந்ததும் கயலைக் கண்ட ஐயாவின் மனைவி மணிமேகலை &#8220;யாருங்க இந்தப் பொண்ணு?&#8221; என கேட்க &#8220;இவள்தான் கயல், உன்கிட்ட இவளப் பற்றித்தான் அடிக்கடி சொல்லுவனே ஞாபகமிருக்கா, எனி இவள்தான் நம்மட மகள். உன்ன அம்மா என்டு கூப்பிட ஒரு ஆள் வந்திட்டுது, உன‌க்கு சந்தோசம்தானே?&#8221; சந்தோசத்தில் மிதந்த அவளுக்கு, இவள் ஏன் இங்கு வந்தாள் என்று கூடக் கேட்கத் தோணவில்லை. கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். கயல் &#8220;உங்கள மாறி நல்லவங்களயும் படச்சிட்டு, என்ர அப்பாவ மாறி ஒரு கொடூர மிருகத்தையும் கடவுள் படச்சிருக்கிறார். ஏன் அம்மா?&#8221; &#8220;நீ ஒன்னுக்கும் கவலப்படாத, எனி நீ நம்மட மேள். என்ன நடந்தது என்டு என‌க்கு தெரியா, ஆனா நான் அதக் கேக்கவும் விரும்பல, நீ எல்லாத்தயும் மறந்திட்டு புது வாழ்க்க வாழு&#8221; என சொல்லி முடித்தாள் மணிமேகலை. சிரித்தபடி கயல் &#8220;எப்பிடிமா நான் எனி புது வாழ்க்க வாழ முடியும், மறக்க நினச்சாலும் அது என்னால முடியாதுமா. மறக்கிற விசியமா என்ர வாழ்க்கைல நடந்திருக்கு&#8221; &#8220;சரி சரி, கயல் கனதூரம் பயணிச்சது களைப்பா இருக்கும், போய் கை, கால் அலம்பிற்று வா&#8221; என்றார் ஐயா. மறுநாள் அதிகாலையில் ஐயாவின் காதில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி.கயல் கிணற்றுக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டாள். அங்கு ஒரு கடிதம் &#8220;எனது சாவுக்கு யாரும் காரணமில்ல, இது என்ர சொந்த முடிவுதான். மற்றும் ஐயாவும் அம்மாவும் என்னை மன்னிச்சிடுங்கோ, எனக்கு இத விட வேற வழி தெரியல. அடுத்த ஜென்மத்திலயாவது நான் உங்கட மகளாப் பிறக்க வேணும்.&#8221; என அதில் எழுதப்பட்டிருந்தது.</p>
<p>மேலும் பிரேத பரிசோதனையில் அவள் கற்பமாக இருந்தது தெரியவந்தது!</p>
<p>- பிறைனா நாதன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/2032/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்</title>
		<link>http://ezilnila.com/archives/2021</link>
		<comments>http://ezilnila.com/archives/2021#comments</comments>
		<pubDate>Sun, 06 Jan 2013 23:34:51 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[கணினிக்கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=2021</guid>
		<description><![CDATA[முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன. 1. விண்டோஸ் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong><a href="http://ezilnila.com/wp-content/uploads/win81.gif"><img class="alignleft size-full wp-image-1981" title="win8" alt="" src="http://ezilnila.com/wp-content/uploads/win81.gif" width="129" height="129" /></a></strong>முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன.<span id="more-2021"></span><br />
<strong>1. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கும், எக்ஸ்பி, விஸ்டா, விண் 2007 ஆகியவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?</strong><br />
விண் 8 சிஸ்டம் முற்றிலும் மாறுபட்ட முழுமையான செயல்பாட்டினைத் தருகிறது. விண் 2007க்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இதனை ஒப்பிட்டால், இதில் கிடைக்கும் அனுபவம் புதுமையாகவே இருக்கும். ஆனால், விண் 2007 சிஸ்டத்தில் பழகியவர்களுக்கு மாறுதலான பயன்பாடுகள் ஓரளவேதான் இருக்கும். ஏனென்றால், விண்டோஸ் 2007 சிஸ்டத்திற்கு மக்களிடம் கிடைத்த பேராதரவினால், அதில் இயங்கும் பல்வேறு கூறுகளை, விண் 8 சிஸ்டத்திலும், மைக்ரோசாப்ட் அமைத்துள்ளது. யூசர் இன்டர் பேஸ் மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவை மட்டுமே முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.</p>
<p><strong>2. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் லினக்ஸ் சிஸ்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?</strong><br />
புரோகிராமிங் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் இரண்டும் வேறுபடுகின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின், செயல் இயக்க குறியீடுகளை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால், லினக்ஸ் இயக்கக் குறியீடுகள், &#8220;திறவூற்று&#8217; என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் உருவாக்கப்பட்டது. இதனைப் பெற்று, யார் வேண்டுமானாலும், தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். லினக்ஸ் பல்வேறு நாடுகளில், பல மாறுபட்ட வடிவமைப்பில் கிடைக்கின்றன. இதனால், அதில் இணைந்து செயலாற்ற ட்ரைவர் புரோகிராம்களைத் தேடிப் பெற வேண்டும். மேலும், இதனைக் கற்றுக் கொண்டு இயக்குவது சற்று காலம் எடுக்கும் செயலாகும். விண்டோஸ் அப்படிப்பட்டது இல்லை. உலகெங்கும் ஒரே மாதிரியான இயக்கம் கொண்ட, இயக்குவதற்கு எளிதான சிஸ்டம் விண்டோஸ்.</p>
<p><strong>3. ஸ்டார்ட் மெனு ஏன் இல்லை?</strong><br />
விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் அனைவரும், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் இருந்த ஸ்டார்ட் மெனு, இதில் இல்லை என்பதைக் குற்றமாக அல்லது வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் மெனுவிற்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சதுர வடிவ ஓடுகளாக அடுக்கப்பட்டுள்ளன. விரல் அசைவில் அல்லது மவுஸ் தொடலில் இவை அழகாக நகர்ந்து நம் முன் தயாராக இருக்கின்றன. இந்த மாற்றத்தினை பெரும்பாலான மக்களின் விருப்பத்தினை அறிந்த பின்னர் கொண்டு வந்ததாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் இதனை வருங்காலத்தில் விரும்பிப் பயன்படுத்து வார்கள் எனவும் கூறியுள்ளது.</p>
<p><strong>4. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யு.எஸ்.பி. ட்ரைவில் இருந்து இயக்கலாம் என்பது உண்மையா?</strong><br />
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பு விண்டோஸ் என்டர்பிரைஸ் (Windows Enterprise) என அழைக்கப்படுகிறது. இதில் விண்டோஸ் டு கோ (Windows To Go) என்று ஒரு இயக்க வழி தரப்படுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் வைத்து இயக்கலாம். இது விண் 8 சிஸ்டத்தினை, யு.எஸ்.பி.ட்ரைவ் பயன்படுத்தும் கம்ப்யூட்ட ரில் பதியாது. மாறாக, யு.எஸ்.பி. ட்ரைவில் இருந்தே இயக்கும். யு.எஸ்.பி. ட்ரைவ், கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கப்பட்டால், 60 விநாடிகள், சிஸ்டம் இயங்கிய நிலையில் இருக்கும். மீண்டும் யு.எஸ்.பி. ட்ரைவினை இணைத்தால், சிஸ்டம் விட்ட இடத்தில் இருந்து இயங்கத் தொடங்கும். விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தப்படும் ஒரு நிறுவனத்தில், அதன் அலுவலர்கள் எல்லாருக்கும் இந்த பயன்பாடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மைக்ரோசாப்ட் விண்டோஸ் என்டர்பிரைஸ் என்ற அமைப்பினை, யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்து இயக்கும் வகையில் தந்துள்ளது. இதனை எந்த யு.எஸ்.பி. ட்ரைவிலும் வைத்து இயக்க முடியாது. இன்றைய நிலையில், மைக்ரோசாப்ட் மூன்று மாடல் யு.எஸ்.பி. ட்ரைவ்களை மட்டுமே, இதற்கென அங்கீகரித்துள்ளது.</p>
<p><strong>5.விண் 8 சிஸ்டத்துடன், முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு கம்ப்யூட்டரில் இயங்கும் வகையில் டூயல் பூட் முறை அமைக்க முடியுமா?</strong><br />
முடியும். விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், விண் 8 சிஸ்டத்தைப் பதிந்து, டூயல் பூட் முறையில் இயக்கலாம். இதற்கென சில வழிமுறைகளை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதனைப் பின்பற்றித்தான் இந்த டூயல் பூட் முறை அமைக்கப்பட வேண்டும்.</p>
<p><strong>6.விண்டோஸ் ஆர்.டி. என்பது என்ன? இது விண்டோஸ் 8 சிஸ்டம் போன்றதா? அல்லது மாறுபட்டதா?</strong><br />
விண்டோஸ் ஆர்.டி. (Windows RT) என்பது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் இன்னொரு வகையாகும். இது மொபைல் சாதனங் களுக்கான விண் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் என வைத்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசிக்கள் போன்ற மொபைல் சாதனங்கள், டெஸ்க்டாப் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டு செயல்படுகின்றன. எனவே, இவற்றில் இயங்கும் வகையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்தினைத் தந்துள்ளது.<br />
இதில் ஆர்.டி. என்பது என்ன? என்று இதுவரை மைக்ரோசாப்ட் விளக்கம் தர வில்லை. ஆனால், பல வலைமனை எழுத்தர்கள், இதனை “Run Time” என்றும் “Windows Run Time” எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மைக்ரோசாப்ட் எதனையும் ஏற்று அறிவிக்கவில்லை. வர்த்தக ரீதியாக, விண்டோஸ் 8ன் பிரிவாக ஒரு பெயரைக் கொடுக்க, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்தியுள்ளது என்றுதான் கொள்ள வேண்டியதுள்ளது.</p>
<p><strong>7. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் விண்டோஸ் போன் 8 க்கும் என்ன தொடர்பு?</strong><br />
விண்டோஸ் போன் 8 என்பது மொபைல் போன்களுக்கான நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இது விண்டோஸ் 8 சிஸ்டம் அமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்கப்படும் சாதனங்களுடன் இணைந்து இந்த சிஸ்டம் கொண்டுள்ள மொபைல் போன்கள் செயல்படும். விண்டோஸ் போன் 8 கொண்ட மொபைல் போன்கள் சில தற்போது கிடைக்கின்றன. நோக்கியாவின் லூமியா வரிசை போன்களும், எச்.டி.சி. விண்டோஸ் வரிசை போன்களும், இந்த சிஸ்டத்தினைக் கொண்டுள்ளன.</p>
<p><strong>8. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் ஸ்கை ட்ரைவிற்குமான தொடர்பு எப்படிப்பட்டது?</strong><br />
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண்டோஸ் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது. நாம் விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கும்போதே, நமக்கு ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது. நம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் ஸ்டோர் செய்யப்படுகிறது. அப்டேட் செய்யப் படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம். இந்த வழிமுறையை (“Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. தமிழில் &#8220;தருவித்தல்&#8217; என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை. நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p>
<p><strong>9. என்னுடைய நிறுவனத்தில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பயன்படுத்தி வருகிறேன். கட்டாயமாக அலுவலகக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 பயன்படுத்த மாற்றிக் கொள்ள வேண்டுமா?</strong><br />
விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் சப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் விரைவில் நிறுத்த உள்ளது. பெருகி வரும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்பாட்டினைப் பார்க்கையில், மாறிக் கொள்வது நல்லது.</p>
<p><strong>10. நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். நான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டுமா?</strong><br />
கட்டாயம் மாறிக் கொள்ளத் தேவை இல்லை. நீங்கள் எது போன்ற பணிகளுக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது.</p>
<p><span style="color: #000080;">நன்றி: கம்ப்யூட்டர் மலர்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/2021/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆங்கில அம்மணி</title>
		<link>http://ezilnila.com/archives/2000</link>
		<comments>http://ezilnila.com/archives/2000#comments</comments>
		<pubDate>Mon, 10 Dec 2012 00:21:22 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[சாம்பவியின் ஆக்கங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=2000</guid>
		<description><![CDATA[அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.அம்மணி திடீரென எழுந்து நடத்துனரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தார். மறுகணமே AC கூட்டப்பட்டது. இன்று எனக்கு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/bus.jpg"><img class="alignleft size-full wp-image-2003" title="bus" src="http://ezilnila.com/wp-content/uploads/bus.jpg" alt="" width="150" height="150" /></a>அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.<span id="more-2000"></span>அம்மணி திடீரென எழுந்து நடத்துனரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தார். மறுகணமே AC கூட்டப்பட்டது. இன்று எனக்கு விறைப்புவலி ஏற்படப்போவது திண்ணம் என எண்ணினேன். அம்மணி என்ன எஸ்கிமோவா் இனத்தைச் சேர்ந்தவரோ??? இல்லை இல்லை அவர் கனடாவிலிருந்து வருகிறாராம். குளிரில்லாமல் நானில்லை என வாழ்ந்தவராம். ஆனால் பூர்வீகம் நம்நாடு.<br />
&#8230;<br />
நடத்துனரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பேரூந்திலிருந்த பெரும்பாலானவா்களின் எதிர்ப்புக் கிளம்பவே AC மறுபடியும் பழைய நிலைக்கு.<br />
ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த என்னை அம்மணியின் குரல் ஈர்த்தது. அவர் யாருடனோ phone ல் பேசுகிறார். தமிழிலல்ல ஆங்கிலத்தில். எனது முழுக்கவனத்தையும் அவரது உரையாடலில் செலுத்தினேன். பேரூந்தில் அம்மணியின் குரலைத்தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அப்போது தான் உணர்ந்தேன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னைப்போல் விடுப்பு பிரியா்கள் என. எல்லோரும் அம்மணியின் உரையாடலைக் கூர்ந்து கவனிக்கின்றனர். அம்மணி பேசுவது ஆங்கிலத்தில் ஆனால் அவருடன் மறுபுறத்தில் phone ல் பேசுபவர் தமிழில் பேசுவது அனைவருக்கும் தெட்டத்தெளிவாகக் கேட்கின்றது. ஏன் அம்மணி ஆங்கிலத்தில் பேசுகிறார்?????? (இதுக்குப் பேர் தான் scene போடுறதா?)<br />
அம்மணியின் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் அற்ற உரையாடலைக் கேட்க சுவையாகத்தான் இருந்தது. கேட்டபடியே துாங்கிவிட்டேன்.<br />
திடீரென்று நான் விழித்துப்பார்த்த பொழுது பேரூந்து ஓா் இடத்தில் தரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து மீண்டும் பேரூந்து புறப்படத் தயாரான நேரம் முன்று வெள்ளைக்காரர்கள் எங்களுடைய நடத்துனரை அணுகி ஏதோ கேட்டார்கள். அவர்களுடைய ஆங்கில உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாத நடத்துனா் அரைகுறை ஆங்கிலத்தில் இவ்வளவு நேரமாக build up காட்டிய அம்மணியை உதவிக்கு அழைத்தார். அம்மணியின் முகமாற்றத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ‘இவயோடயெல்லாம் வந்து கதைக்கேலாது ‘ என்று சற்றுக் காட்டமாகவே கூறிவிட்டு ஒரேயடியாக நித்திரையில் ஆழ்ந்தவர் போல் பாசாங்கு பண்ணி அப்படியே அடங்கிவிட்டார்.<br />
இவ்வளவு நேரமும் அமைதியாக அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதானவா் விழிபிதுங்கி நின்ற நடத்துனரிற்கு உதவிக்குச் சென்று நிலமையை சமாளித்தார்.<br />
அதற்குப்பின்னர் பேரூந்து நிசப்தத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது.</p>
<p><span style="color: #666699;">குறிப்பு &#8211; பல மொழிகளை அறிந்திருத்தல் உலகத்தில் மிக அவசியமான ஒன்று ஆனால் இடம் பொருள் ஏவல் அறிந்து அவற்றைப் பாவிப்பதே மொழியறிவின் பூரணத்துவமாகும்.</span></p>
<p><span style="color: #666699;">- சாம்பவி சிவாஜி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/2000/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மயக்கம்</title>
		<link>http://ezilnila.com/archives/1987</link>
		<comments>http://ezilnila.com/archives/1987#comments</comments>
		<pubDate>Sat, 08 Dec 2012 19:36:15 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[சாம்பவியின் ஆக்கங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1987</guid>
		<description><![CDATA[ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் &#8216; மாப்பிள்ளை வந்திட்டார்&#8217;. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில். ஆரத்தியெடுக்கத் தயாரானவா்களையும் அவா்கள் விட்டபாடில்லை. ஒருவாறாக மாப்பிள்ளை மண்டபத்தின் வாயிலை அடைந்துவிட்டார். மூன்றுமுறை ஆரத்தி எடுப்பது இந்துக்களின் பண்பாடு. முதல் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/wedHands1.jpg"><img class="alignleft size-full wp-image-1998" title="wedHands" src="http://ezilnila.com/wp-content/uploads/wedHands1.jpg" alt="" width="150" height="150" /></a>ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் &#8216; மாப்பிள்ளை வந்திட்டார்&#8217;. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில். <span id="more-1987"></span>ஆரத்தியெடுக்கத் தயாரானவா்களையும் அவா்கள் விட்டபாடில்லை. ஒருவாறாக மாப்பிள்ளை மண்டபத்தின் வாயிலை அடைந்துவிட்டார். மூன்றுமுறை ஆரத்தி எடுப்பது இந்துக்களின் பண்பாடு. முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதியாக ஆரத்தித்தட்டத்தை சுற்றும் போது மாப்பிள்ளை தலை சுற்றி தரைமேல்.<br />
மணப்பெண்ணின் தாயார் தன் மகளின் வாழ்க்கையே தொலைந்து விட்டது என எண்ணி பலத்த ஓலமிட்டார். திருமணத்தைக் காண வந்தோர் ஈ மொய்ப்பது போல மாப்பிள்ளையை மொய்க்கத்தொடங்கினா். அங்கிருந்த புத்திஜீவிகள் சிலா் அனைவரையும் சற்று விலகும் படி கூறி ஒருவாறாக ஒரு ‘ lemon juice &#8216; இன் உதவியுடன் மாப்பிள்ளையை எழ வைத்தனா்.<br />
மீண்டும் சடங்குகள் சம்பிரதாயங்கள் களைகட்டத்தொடங்கின. தாலி கட்டும் படலமும் இனிதே நிறைவேறியது.<br />
மாப்பிள்ளையின் மயக்கம் தொடர்பாக கூட்டத்திலிருந்தோர் பலவாறாக கவி பாடினா்.</p>
<p>‘ மாப்பிள்ளை Heart patient ஆம்&#8217;<br />
&#8216;வருத்தக்காறப்பெடியன இந்தப்பிள்ளைக்கு கட்டிவச்சிருக்கினம்&#8217;</p>
<p>இன்னும் பல பல காரணங்கள்&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;<br />
மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுந்ததற்கான உண்மையான காரணத்தை யாரும் சொன்னபாடில்லை. ஆகவே நான் சொல்கிறேன்.<br />
திருமணநாளன்று மணமகனும் மணமகளும் விரதமிருந்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர் முதலாவதாக இருவரும் இணைந்து உணவருந்துவது தான் நமது சம்பிரதாயம்.<br />
பாவம் மாப்பிள்ளை!!!!!!!! விரதத்தைப்பற்றி முன்னொருபோதும் அறியாதவா். திருமண வேலைகளை இரவிரவாக கண்விழித்துச் செய்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் அவரை விறைக்கும் நீரில் குளிப்பாட்டியிருக்கின்றனா். வீடியோக்காரர்கள் படம் பிடிப்பதற்காகவே மிகவும் ஆறுதலாக மாப்பிள்ளைக்கு அபிசேகம் செய்திருக்கிறார்கள் பெரியோ்கள்.<br />
காலைச்சாப்பாடு இல்லை, தலையில் தண்ணீா், போதிய நித்திரையில்லை. மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுவார்தானே.<br />
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதவாழ்விற்கு அவசியமானவை. ஆனால் அவை மனிதனையே கட்டுப்படுத்துகின்றபோது விளைவுகள் விபரீதமாகலாம்.</p>
<p><span style="color: #808080;">நான் வரைந்த இச்சிறுகதையானது அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்தது.</span></p>
<p><span style="color: #808080;">- சாம்பவி சிவாஜி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1987/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது</title>
		<link>http://ezilnila.com/archives/1974</link>
		<comments>http://ezilnila.com/archives/1974#comments</comments>
		<pubDate>Thu, 25 Oct 2012 20:04:55 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1974</guid>
		<description><![CDATA[உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது. தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் 7 சிஸ்டம் வரை நமக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகும் வகையில், இந்த இயக்கத்தில் மாறுதலான சிறப்பம்சங்கள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/win81.gif"><img class="alignleft size-full wp-image-1981" title="win8" src="http://ezilnila.com/wp-content/uploads/win81.gif" alt="" width="129" height="129" /></a>உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது. தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் 7 சிஸ்டம் வரை நமக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகும் வகையில், இந்த இயக்கத்தில் மாறுதலான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. &#8220;விண்டோஸ் 8 சகாப்தம்&#8217; என புதிய ஒன்று தொடங்க இருக்கிறது.<span id="more-1974"></span><br />
இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம் கூட எண்ணிப்பார்க்காத புதிய முயற்சியாகும். ஆப்பிள் இன்னும் தன் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டருக்கென ஒன்றும் (OS X Mountain Lion) மற்றும் ஐபோன், ஐபேட், ஐபாட் டச் ஆகியவற்றிற்கென (iOS 6)ஒன்றுமாக, இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தந்து கொண்டிருக்கிறது. இவற்றின் சில கூறுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இயக்க முறைமை வேறுதான். எனவே, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி &#8220;&#8221;ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்&#8221; என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, &#8220;&#8221;விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்&#8221; என இனி இரு பிரிவுகள் காட்டப்படும் வகையில் விண்டோஸ் 8 பயனாளர்களைத் தன் சிறப்பம்சங்களால் மாற்ற இருக்கிறது.<br />
விண்டோஸ் 8, இதற்கு முந்தைய சிஸ்டங்களின் அடியைப் பின்பற்றி, புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிஸ்டம் அல்ல. முற்றிலும் புதுமையாக, அனைத்தையும் மாறுதலுக்கு உள்ளாக்கி, எதிர்பாராத வடிவமைப்பையும் கொண்டதாக இது விளங்குகிறது.<br />
குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங்களில் மக்கள் ரசித்துப் பயன்படுத்தும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக இதனை மைக்@ராŒõப்ட் தந்துள்ளது. இதில் இணைக்கப்பட்டு தரப்பட்டிருக்கும் மெட்ரோ அப்ளிகேஷன் மற்றும் தொடுதிரை பயன்பாடு, தன் நிறுவனத்திற்கு ஒரு புதிய திருப்பத்தினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இவற்றின் மிகச் சிறப்பான சில அம்சங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். விண்டோஸ் 8 திறந்தவுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முதல் விஷயம் இன்டர்பேஸ் எனப்படும் இடைமுகம் தான். உயிர்த் துடிப்புள்ள செவ்வகக் கட்டங்கள் நம்மை வரவேற்கின்றன. உயிர்த்துடிப்பு என்று சொல்வதற்குக் காரணம் அவை அப்போதைய நிகழ்வைக் காட்டிக் கொண்டிருப்பதுதான். உங்களூர் சீதோஷ்ண நிலையாகட்டும், பங்குச் சந்தை நிகழ்வாகட்டும், பயன்படுத்துகிற புரோகிராம்களாகட்டும், அனைத்தும் அப்போதைக்குப் பாயத் தயாராக இருக்கும் குதிரைகளாக உங்கள் தொடுதலுக்குக் காத்திருக்கின்றன. இசைக்கப்படும் பாடல், அந்நேர உடனடிச் செய்தி, போட்டோ, காத்துக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் விபரம், வீடியோ, மேற்கொள்ள வேண்டிய வேலைக்கான காலம் காட்டும் காலண்டர் என நீங்கள் உடன் ரசிக்க, கேட்க, செயல்படுத்த விரும்பும் அனைத்தும் தயாராக உள்ளன.<br />
மூன்று வகையான தொடு உணர்வினை சிஸ்டம் ஏற்றுச் செயல்படுத்துகிறது. மல்ட்டி டச் ஏற்கும் டச் பேடாக திரை உள்ளது. இரு விரல்களைக் குவித்து திரையின் குறிப்பிட்ட பகுதியைப் பெரிதாக்குவது, இரு விரல்களை எக்ஸ் மற்றும் ஒய் அச்சுக்கள் திசையில் இழுத்து காண்பது மற்றும் முனையில் விரல் வைத்து இழுத்து இயக்குவது. இதில் மூன்றாவதாகத் தரப்பட்டுள்ளது, வழக்கமான திரையில் இயங்கக் கூடியதாக இருக்கும். மவுஸ் மூலம் அதனை இயக்கும் வகையில் சிறப்பு கவனம் மற்றும் வடிவமைப்புடன் மவுஸ் சாதனங்களைத் தயாரிக்கும்படி ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாப்ட் கேட்டுள்ளது.<br />
ஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பில் கூடுதலாக தனி நபர் அமைப்பினை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இணைப்புகளுக்கான மேம்பாட்டு வசதி, குழந்தைகள் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாடு கொள்ள கூடுதல் வசதி, குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியே பயன்படுத்த அமைக்கும் வசதி, ஆகியவை கூடுதல் சிறப்பாகும். விண் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் தொடர்ந்து உணர்ந்து ரசிக்கும் விஷயங்களாக, மவுஸ் மற்றும் கீ போர்ட் செயல்பாட்டின் மேம்பாடு இருக்கப் போகிறது. கர்சரை இடது அல்லது வலது மூலைக்குச் சென்று இழுப்பதில், அப்ளிகேஷன் புரோகிராம்களின் இயக்கங்கள் செயல்படுவதாய் உள்ளன.<br />
விண் 8 சிஸ்டத்தின் ஸ்டார்ட் ஸ்கிரீன், ஹோம் பேஜ் போல் செயல்படுகிறது. இதில் கட்டங்களைத் தொட்டால், ஒரு சில கிளிக் செய்தால், நம் புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன.<br />
பிங் தேடல் கருவிக்கான அப்ளிகேஷன்கள் செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள், விளையாட்டு மற்றும் செய்தி என வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. Mail, Photos, and People அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் கூடுதலாக தனிநபர் செட்டிங்ஸ் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. கூடுதல் மானிட்டர் சப்போர்ட் மேம்படுத்தப் பட்டுள்ளது. விண்டோஸ் ஸ்டோர் தேடிக் காண்பது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் இயக்கத்திற்கான வழிகள், பெற்றோர் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான டெஸ்க்டாப் வேண்டுவோருக்கு, அதுவும் வழங்கப்படுகிறது. ஆனால், ஸ்டார்ட் பட்டன் இல்லாமல் கிடைக்கிறது. டாஸ்க் பார் மற்றும் சிஸ்டம் ட்ரே தரப்படுகின்றன. விண்டோஸ் கீ அழுத்தினால், கட்டங்களுடன் உள்ள விண் 8 திரைக்கு மாறிக் கொள்ளலாம். ஒரு மானிட்டரில் டெஸ்க்டாப் திரையுடனும், இன்னொன்றில் விண் 8 திரையுடனும் இயங்கலாம். “Refresh your PC” என்ற பட்டனை அழுத்தி சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம். “Restore Points” போல “Refresh Points” ஏற்படுத்தி, விரும்பும் நாளில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் சிஸ்டத்தைப் பெறலாம். Task Manager மற்றும் Windows Explorer புதுப்பிக்கப்பட்டு புதிய செயல்பாட்டைக் கொண்டுள்ளன. விண்டோஸ் இயக்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் புதிய வழிமுறைகள், செயல்முறைகள் தரப்பட்டு பயனாளர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன.<br />
விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தனியாகவும், ஏற்கனவே இருக்கின்ற சிஸ்டத்தின் மேம்பாடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.<br />
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்படியே விண்8க்கு மாற்றிக் கொள்ளலாம். புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் தானாக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தக் கிடைக்கும். விண் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், மீண்டும் விண்டோஸ் 7 அல்லது விஸ்டாவிற்கு மாற வேண்டும் எனில் மாறிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்பிக்குச் செல்ல முடியாது.<br />
முற்றிலும் புதிய வகையில் செயல்பட இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மக்கள் மாறுவார்களா? நிச்சயம் மாறுவார்கள், மாற்றிக் கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். டாஸ் இயக்கத்தினை அடுத்து மவுஸ் இணைந்த விண்டோஸ் இயக்கம் வந்த போது, பலர் தயங்கினர்; ஆனால் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்கும் வசதி போன்ற பல வசதிகள், அப்படியே விண்டோஸ் இயக்கத்திற்கு மக்களை மாற வைத்தது. ஆனால், இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் தொடுதிரை பயன் பாட்டினை நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே நிச்சயம் பெர்சனல் கம்ப்யூட்டரில் தொடு திரை இணைந்த வசதிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.</p>
<p><span style="color: #008080;">நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1974/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே !</title>
		<link>http://ezilnila.com/archives/1969</link>
		<comments>http://ezilnila.com/archives/1969#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 14:55:23 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1969</guid>
		<description><![CDATA[நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/walkText.jpg"><img class="alignleft size-full wp-image-1970" title="walkText" src="http://ezilnila.com/wp-content/uploads/walkText.jpg" alt="" width="150" height="150" /></a>நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. <span id="more-1969"></span>மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.<br />
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.<br />
இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.</p>
<p><span style="color: #333399;">நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1969/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யுத்தச் சுற்றுலா!</title>
		<link>http://ezilnila.com/archives/1958</link>
		<comments>http://ezilnila.com/archives/1958#comments</comments>
		<pubDate>Sat, 12 Nov 2011 15:38:57 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1958</guid>
		<description><![CDATA[உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது. ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு  தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. போகும் வழியில் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/kili.jpg"><img class="alignleft size-full wp-image-1959" title="kili" src="http://ezilnila.com/wp-content/uploads/kili.jpg" alt="" width="150" height="150" /></a>உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.</p>
<p>ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு  தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.<br />
<span id="more-1958"></span>போகும் வழியில் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு சூடான மதிய வெய்யிலில் பயணிகள் கீழே இறங்கி, உடைந்து நொறுங்கி காட்சிதரும் தண்ணீர் தொட்டிகள், கைப்பற்றப்பட்ட படகுகள், கவச வாகனங்கள் மற்றும் இராணுவத்தினருக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்கள் என்பனவற்றை புகைப்படம் பிடிப்பதற்காக தங்கள் செல்லிடத் தொலைபேசிகளை வெளியே எடுத்து தயாராகிறார்கள். சில இடங்களில் அவர்கள் குளிரான உணவுப் பதாhத்தங்கள் மற்றும் நினைவுச் சின்னமாக பாதுகாக்க ஒரு மேற்சட்டை என்பனவற்றை வாங்குகிறார்கள்.</p>
<p>இந்து மகா சமுத்திரத் தீவில் 25 வருடங்கள் பழமையான உள்நாட்டு யுத்தம் றிறைவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஸ்ரீலங்காவின் ஒரு முழுத் தலைமுறைக்குமே இதுவரை தாங்கள் செல்வதற்குத் தடையாக இருந்த தங்கள் நாட்டின் ஒரு பகுதியைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. அது அவர்கள் கேள்விப்பட்டு மட்டுமே இருந்த ஓரிடம், ஆனால் அங்கு வருகை தருவோம் என்று அவர்கள் கற்பனையில்கூட நினைத்திருக்காத ஓரிடம், யுத்தத்தின் வடுக்களிலிருந்து இப்போது மெல்ல குணமடைந்துவரும் ஓரிடம்.</p>
<p>“இவைகளையெல்லாம் பார்ப்பது உண்மையில் சுவாராஸ்யமானது” என்று தெரிவித்தார், தலைநகர் கொழும்பைச் சேர்ந்த கயான் எனும் 33 வயதான கணக்காளர் ஒருவர். அவர் கைப்பற்றப்பட்ட ஒரு இராணுவ ஊர்தியின் முன்பாக நின்று புகைப்படத்துக்கு காட்சி தரும் தனது தந்தையையும் சகோதரனையும்  புகைப்படம் எடுப்பதற்காக தனது பிளாக் பெர்ரி செல்லிடப் பேசியை தயாராக கைகளில் பிடித்திருந்தார். இது 25 வருட உள்நாட்டுப் போரின்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோதல்கள் இடம்பெற்ற மூலோபாயம் மிக்க இராணுவத் தளமான ஆனையிறவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு வீதியோர சுற்றுலா விடுதியில் காணப்பட்ட காட்சி.</p>
<p>“வளர்ந்து வரும் நாங்கள் புலிகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். மற்றும் கொழும்பில் நடக்கும் அவர்களின் தாக்குதல்களையிட்டு அச்சமடைந்திருக்கிறோம். எனவே சமாதானம் உண்டாவது அத்துடன் வடபகுதியை பார்வையிடுவது எல்லாமே நல்லதுதான்” என்று விடுதியிலிருந்து பனிக்கட்டிபோல குளிரான கோக் பானத்தை உறிஞ்சியபடியே சொன்ன அவர் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காலத்தில் புலிகளுக்குச் சொந்தமாகவிருந்த ஏனைய யுத்த நினைவுச்சின்னங்களான ஒரு உழவு யந்திரம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட படகு என்பனவற்றை ஆய்வு செய்வதில் தனது கவனத்தை திருப்பினார்.</p>
<p>ஸ்ரீலங்கா இராணுவம்  ஆசியாவின் நவீனமயமான நீண்ட மோதலை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வருவதன் ஒருபகுதியாக 34 மாதங்களாக சண்டையிட்டு 2000ம் ஆண்டு முதல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆனையிறவை திரும்ப பெற்றுக் கொண்டது. அத்துடன் மே 2009ல் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவின் மூன்றிலொரு பகுதி பரப்பளவையும் பயங்கர அழிவுகளை ஏற்படுத்திய இறுதிப்போரில் பிரிவினைவாதிகளைத் தோற்கடித்தது மூலம் திரும்பப் பெற்றது.</p>
<p>கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதியினர் தொடர்ச்சியாக அச்சமடைந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு காரணமான 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புலிகளின் தரக் குறியீடான தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் இதர தாக்குதல்களுக்கு இந்த வெற்றி ஒரு முடிவுகட்டியது.</p>
<p>இப்போது சமூகங்கள் திரும்பிவந்து பார்க்கும் போது அவர்களது வீடுகள் அழிந்து போய், உடமைகள் காணாமற்போய் வருமானம் தேடுவதற்கு வழியற்ற ஒரு நிலையில் அந்த மக்கள் இருப்பதை காண்கின்றனர்.</p>
<p>சில தொண்டு நிறுவனப் பணியாளர்களும் மற்றும் உள்ளுர்வாசிகளும், உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அடுத்தவேளை உணவுக்கு அல்லாடும் நிலையிலும் கடந்தகால வன்முறைகளினால் துயரமான ஒரு சூழலில் வாழும்போது இந்த போர்ச் சுற்றுலா அவசியமா என்று கேள்வியெழுப்புகிறார்கள்.</p>
<p>“போர் முடிவடைந்தது அற்புதமான ஒரு விடயம்தான்” என்று தெரிவித்தார் தனது பெயரை வெளியிடவேண்டாம் என்கிற நிபந்தனையுடன், அப்படி வெளியிட்டால் அது அரசாங்கத்தைப் பாதிக்கும் என அச்சமடைந்திருந்த வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு பணியாற்றும் ஒரு வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்.</p>
<p>“ஆனால் அது மோசமான ஒரு முடிவை ஏற்படுத்தியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உடைந்து நொறுங்கிப்போன தங்கள் வாழ்க்கையை மீளக்கட்ட முடியாமல் மோசமான நிதி நிலமையினாலும், உணர்ச்சி மேலீட்டினாலும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலமைகளிலிருந்து ஒரு சிறிய வணிக ஆதாயத்தை பெற நினைப்பதோ அல்லது பொதுமக்களின் மரணங்களுக்கு ஓரளவு பொறுப்பானவர்களுக்கு நினைவுத்தூபிகளை எழுப்புவதோ மிகவும் விரைவானதும் அறிவுபூர்வமற்றதுமாகும்” என்று அவா மேலும் தெரிவித்தார்.</p>
<p>இறுதிக்கட்ட மோதலின்போது சுமார் 300,000 வரையான மக்களை எதிர்த்துப் போரிடும் புலிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தபோது அரசாங்கம் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றது என்று எழுந்த குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்து விட்டது.</p>
<p>வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பிரிவினைவாதிகளுடன் பணியாற்றவேண்டிய அவசியம் இருப்பதாலும் மற்றும் அவர்களின் அமைப்புகளில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஊடுருவியிருக்கலாம் என்பதாலும் அவர்களின் பிரசன்னத்துக்கு விசேடமாக வடக்கில் அரசாங்கம் ஆப்பு வைத்துவிட்டது.</p>
<p>ரீ- சேர்ட்டுகளும் இராணுவ குறிப்பேடுகளும்</p>
<p>அரசாங்கம் இராணுவ நடவடிக்கை மூலம் நூறாயிரக் கணக்கான தமிழ் பொதுமக்களை வெளியேற்றும்வரை பெரும்பாலான தமிழ் பொதுமக்கள் புலிகள் செல்லுமிடமெல்லாம் கூடச்சேர்ந்து செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இவர்கள் வெளியேற்றப்பட்டதும் முறையான சுகாதார வசதிகளற்ற சன நெருக்கடிமிக்க இடப்பெயர்ச்சி முகாம்களுக்கு அனுப்பப் பட்டார்கள். போரின் கடைசி மாதங்களில் ஏற்பட்ட மோதல்களில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு இறுதியான கணக்குகள் எதுவுமில்லை</p>
<p>ஐநாவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிப்பது, ”ஆயிரக்கணக்கான சிலவேளைகளில் பதினாயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுத் தாக்குதல்களினாலும் மற்றும் மோதல்களினாலும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதற்கு நம்பிக்கையான ஆதாரங்கள் உள்ளன” என்று. ஆனால் அரசாங்கம் இவை புலிகளின் பிரச்சார அமைப்புகளினால் ஆரம்பம் முதலே எழுப்பப் பட்டுள்ள கண்டுபிடிக்கப்படாத போலிக் குற்றச்சாட்டுகளை நிறைத்து வெளியிடப்பட்டுள்ளது என விமர்சித்திருக்கிறது.</p>
<p>இருந்தாலும் இந்த சுற்றுலாப் பேரூந்துகளில் இருந்து இறங்கும் ஒருவராவது இந்த இரத்தம் தோய்ந்த போரின் முடிவினைப்பற்றியோ, அல்லது உயிர்பிழைத்திருப்பவர்கள் படும் இன்னல்களைக் குறித்தோ குறிப்பிடுவதில்லை, தவிரவும் அங்கு காணப்படும் சீருந்துகள், உலக உணவுத்திட்டம் என்று பொறிக்கப்பட்ட சாக்குகளில் நிறைக்கப்பட்ட தானியங்களை ஏற்றியுள்ள பாரஊர்திகள், மற்றும் யு.என் என நீல எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரிய வெள்ளை நிற ஊர்திகள் என்பன இங்கு இன்னமும் உதவிகள் தேவைப்படுகின்றன என்பதன் அடையாளத்தை வெளிக்காட்டினாலும் அவர்கள் அதைப்பற்றிப் பேசுவதில்லை.kilinochchi watertank</p>
<p>கிளிநொச்சி நகர மத்தியை ஊடறுத்துச் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலை ஓரமாக சீமெந்தினால் கட்டப்பட்ட பிரமாண்டமான நீர்த் தாங்கி ஒன்று தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடக்கிறது. இது புலிகள் தமிழை மட்டுமே முக்கியமான மூலவளமாகக் கொண்டு தாங்கள் செதுக்க நினைத்த நாடான தங்களது தமிழீழத்தின் தலைநகராக தாங்கள் ஒருதலைப்பட்சமாக பிரகடனப்படுத்திய ஓரிடத்தை விட்டு பின்வாங்கி ஓடும்போது வெடிவைத்து தகர்த்தது.</p>
<p>இந்த அழிக்கப்பட்ட தாங்கி ஒரு சுவருடன் இணைக்கப்பட்டு ஒரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லாக உள்ளதோடு மற்றும் நினைவுப் பொருட்கள் விற்கும் கடையாகவும் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு சில புகைப்படங்களை எடுப்பதுடன், குளிர்பானங்களை அருந்துவதும் மற்றும் “கிளிநொச்சி மீள் எழுகிறது” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கறுத்த ரீ-சேட்டுகளையோ அல்லது தொப்பிகளையோ அல்லது வெற்றி வீரர்களான இலங்கை இராணுவத்தினரது களக் குறிப்பேடுகளையோ சில நூறு ஸ்ரீலங்கா ரூபாய்களைக் கொடுத்து வாங்கிச் செல்வதுமாக உள்ளனர்.</p>
<p>“வாரநாட்களில் அநேக பேரூந்துகள் இங்கு நி;றுத்தப்படுகின்றன. வார இறுதியில் நாங்கள் கிட்டத்தட்ட 600க்கும் மிக அதிக தொகையிலான வருகையாளர்களைப் பெறுகிறோம்” என்றார் சாதாரண உடை தரித்திருந்த நாலக்க விஜேபால எனும் 24 வயதான ஸ்ரீலங்கா இராணுவ வீரர் ஒருவர். அவரது தலையின் இடது பக்கத்தில் போரின்போது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தின் வடு தெரிந்தது.” இதை இராணுவத்தினரே நடத்துகின்றனர்&#8230;இது மிகவும் பிரசித்தமானது” என அவர் மேலும் சொன்னார்.</p>
<p>பாதை நெடுக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் பல நினைவுச் சின்னங்களில் முக்கியமானவை &#8211; துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கனசதுரக் குற்றி, சிவப்பு, பச்சை, மற்றும் தங்க வர்ணம் கொண்ட ஸ்ரீலங்கா கொடியை ஏந்தி நிற்கும் ஒரு தாமரை மலர் மற்றும் அதில் “இந்த நாட்டை அச்சுறுத்திவந்த மிருகத்தனமானதும் கொடூரமானதுமான பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மேற்கொண்ட கம்பீரமான செயற்பாட்டில் பங்காற்றிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் நினைவாக” என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.</p>
<p>அரசாங்கம் வெகு விரைவாக அதன் இராணுவ வீரர்களையும் மற்றும் சொத்துக்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் யுத்தத்தின் பின்னான அபிவிருத்தி என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நோக்கங்களுக்காக மீளவும் பயன்படுத்தி வருகிறது. மற்றும் அரசாங்கம் வடபகுதியில் சுமார் 100,000 வரையான படை வீரர்களை யுத்தம் நிறைவடைந்த பின்னும் அது விரும்பியதை அடைவதற்காக ஈடுபடுத்தி வருகிறது.</p>
<p>ஆனால் யுத்தத்தில் உயிர்பிழைத்து எஞ்சியிருக்கும் சிலருக்கு இவைகள் யாவும்  வெறுமனே வேகவேகமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப்போலத் தோன்றுகிறது.</p>
<p>நிறுவப்பட்டுள்ள கனசதுர நினைவுச் சின்னத்துக்கு  சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் வீதியோரத்தில் காய்கறி வியாபாரம் நடத்திவரும் சுபேந்தினி எனும் 35 வயதான யுத்த விதவை கூறுகையில்</p>
<p>“அவர்கள் வந்து போகிறார்கள்&#8230;. அவர்கள் தங்கள் புகைப்படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்பதில்லை அல்லது என்ன நடந்தது என்பதைக்கூட அறிந்துகொள்ள விரும்புவதில்லை” என்றார்.</p>
<p>நிற்றா பகல்லா ( Nita Bhalla)</p>
<p>(தொகுப்பு: பிரைசன் ஹல் மற்றும் றெபேக்கா கேர்ட்டிஸ்)</p>
<p>நன்றி: ரொய்ட்டர்ஸ் &#8211; அலேர்ட்நெட்</p>
<p>தமிழில்: எஸ்.குமார்</p>
<p>நன்றி: தேனீ.காம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1958/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?</title>
		<link>http://ezilnila.com/archives/1949</link>
		<comments>http://ezilnila.com/archives/1949#comments</comments>
		<pubDate>Sun, 30 Oct 2011 16:54:21 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[கணினிக்கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1949</guid>
		<description><![CDATA[மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/gmail2.jpg"><img class="alignleft size-full wp-image-1952" title="gmail" src="http://ezilnila.com/wp-content/uploads/gmail2.jpg" alt="" width="150" height="87" /></a>மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.<br />
ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.<span id="more-1949"></span> வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.<br />
இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.<br />
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.<br />
அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.<br />
உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.<br />
ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.<br />
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.<br />
நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.<br />
நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.</p>
<p><span style="color: #3366ff;">நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1949/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விண்டோஸ் 8</title>
		<link>http://ezilnila.com/archives/1930</link>
		<comments>http://ezilnila.com/archives/1930#comments</comments>
		<pubDate>Mon, 10 Oct 2011 20:44:01 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1930</guid>
		<description><![CDATA[கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/Windows_8-1.jpg"><img class="alignleft size-full wp-image-1931" title="Windows_8-1" src="http://ezilnila.com/wp-content/uploads/Windows_8-1.jpg" alt="" width="150" height="106" /></a>கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன. மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.<span id="more-1930"></span>இதில் பல சிறப்பு அம்சங்கள் அறிமுகமாகியுள்ளன. அவை பயனாளர்களுக்கு புதிய வசதிகளைத் தருவனவாக மட்டுமில்லாமல், தொழில் நுட்ப வல்லுநர்களைப் புதிய வழிமுறைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் உள்ளன.<br />
முதலாவதாக, இன்டெல் மற்றும் ஏ.ஆர்.எம். என இரண்டு நிறுவன சிப்களிலும் விண்டோஸ் 8 இயங்கும். இதன் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, ஐ-பேட் வகை டேப்ளட் பிசிக்களிலும் பயன் படுத்தலாம். இது ஸ்மார்ட் போன்களில் இயங்காது; ஆனால் விண்டோஸ் 7 போனில் இயங்கும்.<br />
ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்கள், புதிய புரோகிராம்களை மட்டுமே இயக்கும். ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப் பில் வடிவமைக்கப்படும் புதிய புரோகிராம்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கி வந்த புரோகிராம் களையும், விண்டோஸ் 8 இயக்கும். ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கு கையில், பழைய விண்டோஸ் அப்ளிகேஷன்கள் இயங்காது.<br />
இதனுடைய யூசர் இன்டர்பேஸ் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐகான்கள் நிறைந்த திரைக்குப் பதிலாக, ஓடுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவராக திரை காட்டப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் live data, application screens, communications screens போன்றவை இருக்கும். இவற்றின் மீது தொட்டாலோ, கிளிக் செய்தாலோ, அவற்றிற்கான திரை மேலும் விரிந்து அப்ளிகேஷன்களைக் காட்டிப் பயனாளரை அழைக்கும். இதனை மெட்ரோ (Metro) யூசர் இன்டர்பேஸ் என மைக்ரோசாப்ட் பெயரிட்டுள்ளது. விண்டோஸ் 7 போனுக்கென அமைக்கப் பட்ட வடிவமைப்பில் பெரும்பகுதி இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.<br />
தொடுதிரை வழி உள்ளீடு செய்திடும் வகையில் இது உள்ளது என்றாலும், வழக்கம் போல கீ போர்டு மற்றும் மவுஸ் வழியிலும் இதனை இயக்கலாம். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சினோப்ஸ்கி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தொடுதிரைப் பயன்பாடு அனைத்திலும் நுழைந்துவிட்டது. ஓர் இடத்தில் இருந்து இயக்காமல், எங்கும் எடுத்துச் சென்று இயக்கும் செயல் வேகம் கையாளப் படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் வடிவம் அளித்திட முடிவு செய்து, விண்டோஸ் 8ல் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடுதிரை தொழில் நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், ஆக்ஸில ரோமீட்டர், என்.எப்.சி. தகவல் தொடர்பு போன்றவை சிறப்பாக இயங்கும். அத்துடன் வை-பி, 3ஜி நெட்வொர்க், பிரிண்டிங் ஆகியன ஒன்றோடொன்று இணைந்து இயக்கப்படும். ஸ்டோரேஜ், விண்டோஸ் லைவ் க்ளவுட் சேவை ஆகியனவும் இணைந்து இயங்கும்.<br />
விண்டோஸ் 7 சிஸ்டம் 404 எம்பி இடத்தை ராம் மெமரியில் எடுத்தது. ஆனால் விண்டோஸ் 8, 281 எம்பி இடத்தையே கொண்டுள்ளது.<br />
இதுவரை எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் கொண்டிராத இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வருகையில், அதனையும் கொண்டிருக்கும்.<br />
புரோகிராம்களை வடிவமைப்பவர் களுக்கு, இந்த முறை அதிக ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழி யினைத்தான் அல்லது தொழில் நுட்பத்தினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லாமல், பலவகை ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. C#, XAML, மற்றும் HTML5 என எதனையும் பயன்படுத்தலாம்.<br />
விண்டோஸ் 8 சிஸ்டம் 256 டெரா பைட் அளவுள்ள ஹார்ட் டிஸ்க் வரை எதிர் கொண்டு சப்போர்ட் செய்திடும்; மொபைல் போன் செயல்பாடு போல, மின்சக்தியை மிச்சப்படுத்த பல வழிகள் தரப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் வசதிக்கென கேமரா இதில் பதிக்கப்பட்டு இயங்கும்.<br />
ஓடுகளால் ஆன இந்தக் கட்டங்கள், ஐகான்களைக் காட்டிலும் அதிக தகவல் தருபவையாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் அது சார்ந்த புரோகிராம் களின் தகவல்கள் அப்டேட் செய்யப் பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சீதோஷ்ண நிலை குறித்த அப்ளிகேஷன் அப்போது என்ன தட்ப வெப்ப நிலை என்று காட்டும். இமெயில் புரோகிராம் உள்ள கட்டம் எத்தனை இமெயில்கள் புதியதாய் உள்ளன என்று சொல்லும். நம் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இந்த கட்டங்களை இழுத்துப் போட்டு இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒரு குழுவாக அமைக்கலாம்.<br />
சமுதாய உறவு தரும் தளங்களை இணைக்கலாம்; கேம்ஸ் மட்டும் ஒரு கட்டத்தில் கொண்டு வரலாம். இதனாலேயே, இந்தக் கட்டங்களை விரித்துப் பார்ப்பதை மைக்ரோசாப்ட் “semantic zooming” என அழைக்கிறது. எந்த அப்ளிகேஷன் எங்கு உள்ளது என்பது மறந்து போனால், search மூலம் தேடி அறியலாம்.<br />
விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன் கிடைக்கும் திரையில், அப்போதைய நேரம், தேதி, தனிநபர் தகவல்கள், புதிய இமெயில் எண்ணிக்கை, செயல்படுத்த வேண்டிய அடுத்த அப்பாய்ண்ட்மெண்ட் எனப் பல தகவல்கள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து பயன்படுத்த, பயனாளர் யார் என அறியும் சோதனைப் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கம்போல பாஸ்வேர்ட், எண்களால் ஆன தனி நபருக்கான எண் தொகுதி, படமாக அமைந்த பாஸ்வேர்ட் எனப் பல வழிகள் உள்ளன. பட பாஸ்வேர்ட் எனில், அறிந்த படம் ஒன்று புள்ளிகளால் தரப்பட்டு, பயனாளர் இணைப்பதற்குக் காத்திருக்கிறது. தங்கள் விரல்களால் இவற்றைச் சரியாக இணைத்தாலே, கம்ப்யூட்டரை இயக்க வழி கிடைக்கிறது.<br />
தன் ஆபீஸ் தொகுப்புகளில் உள்ள ரிப்பன் மெனுவினை மீண்டும் விண்டோஸ் 8ல் தந்துள்ளது மைக்ரோசாப்ட். ஆனால் இதில் நிறைய கூடுதல் வசதிகள் உள்ளன. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில், மெனு மாற்றி மெனு செல்லாமல், பைல்களைத் தேடிப் பெற முடியும்.<br />
புதிய பி.டி.எப். ரீடர் ஒன்று “Modern Reader” என்ற பெயரில் தரப்படுகிறது. அதே போல, டாஸ்க் மானேஜர் மாற்றி அமைக்கப்பட்டு “Modern Task Manager” எனப் புதியதாக ஒன்று இயக்கப்படுகிறது.<br />
மைக்ரோசாப்ட் தந்துள்ள இன்னொரு உறுதி மொழியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்க ஹார்ட்வேர் தேவைகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. விண்டோஸ் 7 இயங்கிக் கொண்டிருக்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் விண்டோஸ் 8 இயங்கும். சற்றுக் குறைவான அளவில் ஹார்ட்வேர் அமைப்பு இருந்தாலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்டோஸ் 8 தற்போதைய பயனாளர்கள் அனைவராலும் மேற்கொள் ளப்படும் என எதிர்பார்க் கலாம்.<br />
மைக்ரோசாப்ட் தளத்தில் புரோகிராம் டெவலப்பர்களுக்காகவும், சோதனை செய்து பார்ப்பவர்களுக்காகவும் விண்டோஸ் 8 கிடைக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1930/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திசை மாறும் பறவைகள்</title>
		<link>http://ezilnila.com/archives/1922</link>
		<comments>http://ezilnila.com/archives/1922#comments</comments>
		<pubDate>Sun, 02 Oct 2011 17:16:41 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[இரா.சம்பந்தனின் ஆக்கங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1922</guid>
		<description><![CDATA[காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன. இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு. வெளி நாடுகளில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/girl-1.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-1923" title="girl-1" src="http://ezilnila.com/wp-content/uploads/girl-1-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன.</p>
<p>இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு.<br />
<span id="more-1922"></span><br />
வெளி நாடுகளில் குளிரிலே குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக நின்று போராடி எங்களைப் படுகொலையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல் களைத்துப் போன எம் உறவுகள் ஊரிலே எல்லாம் அழிந்தொழிந்த பின்பும் கூட எஞ்சியவர்களுக்கு பொருள் உதவி செய்து தொழிலும் படிப்பும் கொடுத்து அரவணைக்க நினைக்கும் போது எம்மை அழித்த கைகளுக்கு பப்பாப்பழம் கொடுப்பது இன்று குற்றமாகத்தான் தெரிந்தது நந்தாவுக்கு.</p>
<p>அடுப்பு எரிந்தாலாவது அந்த நெருப்பில் விளக்கேற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் கொடுப்பனவு இல்லாமல் போய்விட்டது. மத்தியான வேளை மட்டும் எரிந்து அணையும் அடுப்பில் எப்போதாவது தான் இரவு வரை சாம்பலுக்குள் தணல் ஒளிந்து கிடக்கும் மற்றப்படி அந்த அடுப்பு செந்தாமரை மலர் போலக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.</p>
<p>இந்தாங்கோ அம்மா. ஏதாவது வாங்கிச் சமைத்து தம்பி தங்கச்சிக்கு கொடுங்கோ என்று நந்தா காசு கொடுத்தாலும் அப்பாவுக்குப் பயந்து அம்மா வாங்க மாட்டாள். ஒருமுறை அம்மாவுக்கு காசு கொடுத்ததற்கே அப்பா சத்தம் போட்டவர்</p>
<p>ஊர் பேர் தெரியாத ஒரு புண்ணிய ஆத்மா நீ பல்கலைக்கழகம் போய் படித்து இந்த வன்னிச் சனங்களுக்கு மருத்துவ சேவை செய்வாய் என்று நம்பி வெளிநாட்டிலே இருந்து அனுப்புற காசை எடுத்து எங்களுக்குச் சாப்பாடு போட்டு நம்பிக்கைத் துரோகம் செய்து போடாதே அம்மா!</p>
<p>நீ படி! அந்தக் காசு உனது படிப்புக்கு மட்டும்தான் பயன்பட வேணும். நான் உழைச்சு அம்மா தங்கச்சி ஆட்களைப் பார்ப்பேன். என்று மனுவேதம் பேசும் அப்பா அகதி முகாமில் இருந்து சொந்த வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே பின் வளவு துப்பரவு செய்கிறேன் என்று வெளிக்கிட்டு மிதி வெடிக்கு வலக் காலைக் கொடுத்துவிட்டு ஆறு மாதங்களாக வீட்டில் தான் இருக்கிறார் எந்த வருமானமும் இல்லாமல்!</p>
<p>ஆண்டுக் கணக்கிலே பாவிக்காமல் பாசி படர்ந்து கங்குமட்டைகள் விழுந்து ஊறிக் கிடந்த கிணற்றிலே தாம்புக் கயிறு கட்டி அம்மா அள்ளிய முதல் வாளி தண்ணீருக்குள் பாசியோடு வந்தது காணாமல் போன அத்தானின் கை எலும்பு தான். சிதறிக் கிடந்த துப்பாக்கிச் சன்னங்களும் வேலி ஓரத்தில் நைந்து கிடந்த அவரின் கோட்டுச் சாரமும் அத்தான் இனி இல்லையென்று சொல்லிவிட்டன.</p>
<p>முகாமில் இருந்து காணி பார்க்கப் போனவர் திரும்ப வரவில்லை. எங்காவது தடுத்து வைத்திருப்பான்கள் தேடுறன் இன்னும் தேட வேணும் என்றுதான் இன்றைக்கும் அக்கா சொல்லும். ஆனால் எலும்பு விசயம் அதுக்குத் தெரியாது. அம்மா சொல்லாமலே விட்டிட்டா. அது கவலைப்படும் என்று.</p>
<p>போர் நடந்த போது அதன் தாக்கம் யாருக்கும் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட புரியவைக்கப்படவில்லை என்பதே சரியாக இருக்கும். வெற்றி பெற்றிருந்தால் கூட அதன் தாக்கம் தெரிந்திருக்காது. ஆனால் தோற்றுப் போய் சிந்திக்க எதுவும் இல்லை என்ற நிலையில் போரின் கொடிய முகம் அடிக்கடி எல்லோர் மனதிலும் தோன்றி மறைகிறது. மனம் பயப்படுகிறது.</p>
<p>அக்கா தன் சீவியத்துக்காக வவுனியாவில் நெசவு தறியில் தான் ஆடை நெய்வது போல நொந்து நூலாகக் கிடக்கும் தான் பிறந்த குடும்பத்தையும் நெய்து முழு ஆடை ஆக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியினால் தான் நந்தாவின் பெயரும் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு பத்திரிகை ஒன்றினால் உதவிக்கு சேர்க்கப்பட ்டு புலம்பெயர் சமூக உதவி என்ற நிலைக்கு அவள் படிப்பைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.</p>
<p>நந்தா அப்பாக்கு கால் ஏலாது. அக்காவும் உதவியில்லாமல் வேலைக்கு போகுது அதுக்கு ஏன் பாரமாக இருக்க வேணும் என்று படிப்பைக் குழப்பிப் போடாதே. நீ படித்தால் தான் அக்காவையும் சேர்த்து வன்னி மக்களோடு காப்பாற்றலாம் என்ற தோழிகளின் வார்த்தையில் இருந்த நியாயத்தை உணர்ந்து தான் கைவிளக்கிலும் படிப்பது என்று முடிவெடுத்தாள் நந்தா.</p>
<p>சில நேரங்களில் அந்தப் படிப்பை விடப் பசி பெரிதாகப் போய்விடும் அவளுக்கு. ஏன் இந்தப் படிப்புக்கு தொடங்கினேன் என்று கூட அவள் நினைத்தது உண்டு. படிப்புக்கு என்று பணம் அனுப்புபவர்கள் பசிக்கும் சேர்த்து அனுப்பினால் கோடி புண்ணியமாகப் போகும். ஆனால் அவர்களின் கடிதங்களில் அது பற்றி ஒரு வார்த்தையும் இருப்பது இல்லையே என்ன செய்வது?</p>
<p>இங்கேயம்மா நந்தா! உனக்கு காசு அனுப்புற ஆட்களுக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் போடு மோனை. நீங்கள் எனக்கு செய்யுற இந்த உதவிக்கு நான் நீங்கள் சொன்னபடி படித்து போரினால் பாதிக்கப்பட்ட இந்த வன்னி மக்களுக்கு சேவை செய்வேன் என்று எழுதம்மா</p>
<p>அம்மா ஞாபகப்படுத்திய மக்களை நினைத்துப் பார்த்தாள் நந்தா. முழு நாட்டுக்குமாக தன்னை முழுமையாகச் சிதைத்துக்கொண்ட ஊர். இறுதி யுத்தத்தின் சுவடே அறியாத யாழ்ப்பாணத்து மக்கள். இயல்பு வாழ்வை இழந்து விடாத கொழும்புத் தமிழர்கள் இவர்களுககு நடுவே குலைந்து போய்க்கிடக்கும் சின்னத் தேசம். அதைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது.</p>
<p>அம்மா சொல்வது போல கடிதம் எழுத அவளுக்கும் விருப்பந்தான். எப்படி எழுதுவது? யார் அவர்கள்? அவர்கள் யாராக என்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். வெளி நாட்டிலே வசதியாக வாழ்ந்தாலும் போரினால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களை நினைக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற என் போன்றவர்களை விதைக்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள் மடடுமல்ல. எம்மவர்கள்.</p>
<p>மருத்துவப்படிப்பு முடிய பல வருடங்கள் எடுக்கும். அதற்கான செலவோ மிகவும் அதிகம். அதைப் பொறுப்பேற்று செய்ய ஒரு உள்ளம் முன்வருகிறது என்றால் அது தெய்வம் தானே! நந்தா எழுதினாள். எழுதித்தான் போட்டாள்!</p>
<p>காலமெல்லாம் எங்கள் மக்களுக்கு உங்களின் பெயராலே சேவை செய்யக் காத்திருக்கும் நந்தா என்று கையெழுத்தும் போட்டு அனுப்பினாள். பதில் இல்லை.</p>
<p>ஒருவேளை உதவி செய்யாமல் விட்டுப் போடுவினமோ? மனம் பதைத்தது. நெருக்கிக் கேட்க அண்ணனா தம்பியா? என்ன செய்வது?</p>
<p>அம்மா நாளைக்கு கடைசி நாள். பணம் கட்ட வேணும் அம்மா. வெளி நாட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லையே! ஒரே ஒரு முறை கொஞ்சப் பணத்தை அனுப்பிப் போட்டு பேசாமல் இருந்தால் நான் என்ன செய்யிறது? இவர்களை நம்பித்தானே நான் படிக்க வெளிக்கிட்டது. ஏன் இப்படிச் செய்யினம்? நான் முதலே நெசவுக்கு போயிருக்கலாம்.</p>
<p>இங்கே பிள்ளை நான் ஒருக்கால் அக்காவைக் கொண்டு டெலிபோன் பண்ணிப் பார்க்கிறன். அண்ணா உயிரோடு இருந்திருந்தால் ஏன் இந்தக் கஸ்டமெல்லாம்? உன்னை இப்படித் தவிக்க விட மாட்டான்.</p>
<p>இல்லை அம்மா எனக்கு தெரியும். வெளிநாட்டிலே இருக்கிற சில பேருக்கு ஊர் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்ல மட்டும் தான் விருப்பம். அதற்கு ஒரு ஆதாரம் ஊரிலிருந்து கிடைத்துவிட்டால் போதும். நான் நன்றி சொல்லிப் போட்ட ஒரு கடிதம் அவர்களுக்கு ஆயள் முழுவதும் காணும் தங்களை உயர்த்திக் கொள்ள. சிலருக்கு அது மட்டும்தான் தேவை. இனிக் காசு வராதம்மா. என்னுடைய படிப்பும் அவ்வளவு தான.; நந்தா அழுதாள்.</p>
<p>இல்லைப் பிள்ளை அதுகளுக்கும் என்ன பிரச்சனையோ.</p>
<p>அம்மா பிரச்சனை இருக்கலாம். என்னுடைய படிப்புக்கு ஆகும் செலவு அதற்கான காலம் எல்லாம் பத்திரிகைத் துறையினர் கொடுத்துத் தானே இருப்பார்கள். தங்களால் முடியாவிட்டால் அதை வேளைக்கே சொல்லியிருக்கலாம் தானே. சொல்லியிருந்தால் நான் கனவுகளை வளர்த்திருக்க மாட்டேன். இப்ப தன்னும் உதவி செய்வினமா இல்லையா என்பது கூட தெரியாமல் நான் தவிக்கிறன்.</p>
<p>இங்கேயம்மா நந்தா நீ படித்த பிள்ளை. உனக்கு தெரியாதது அல்ல. மனிதன் உணர்ச்சியின் விளிம்புக்குப் போய்விட்டால் அவன் பேசும் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது.</p>
<p>வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊடகச் செய்திகளை மட்டும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு உதவி செய்யப் புறப்படுபவர்களின் நட்பு இப்படித்தான் இருக்கும். அது மனித இயல்பு. படித்தவனுக்குத் தான் தெரியும் படிப்பைப் பற்றி. வெளிநாட்டிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து நாங்கள் படிக்கத் தொடங்கினமே ஒழிய அதை அனுப்பிய ஆட்களின் தகுதி பற்றிச் சிந்திக்காமல் இருந்து விட்டோம். சரி போகட்டும். படித்தது காணும். நீ ஏதாவது வேலை தேடு.</p>
<p>பாதியில் நிக்கும் தன் வலக்காலைத் தடவியபடியே சொன்ன அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் நந்தா. பசியோடு உறங்கும் தம்பி தங்கைகளைப் பார்த்தாள். மாவிரனாகிவிட்ட அண்ணனை நினைத்துப் பார்த்தாள். இப்போது அவள் அழவில்லை. அம்மா விரித்துவிட்ட சாக்குப் பைக்கு மேலே மருத்துவப் புத்தகத்தை தலையணையாக வைத்துக்கொண்டு சரிந்து படுத்தாள் நந்தா.</p>
<p>அம்மா நித்திரையா?</p>
<p>இல்லை நந்தா என்ன?</p>
<p>அம்மா கிணத்தடி பப்பா மரத்திலே ஒரு பழம் பழுத்து இருக்குது கண்டீங்களா?</p>
<p>அதுக்கு இப்ப என்ன மோனை?</p>
<p>நாளைக்கு அதைப் பிடுங்கி ரணசிங்காவுக்கு கொடுப்பமே?</p>
<p>ஏன் மோனை நெருப்பட்டி ஏதாவது வேணுமே</p>
<p>இல்லை அம்மா இனி இந்த நாட்டிலே நாங்கள் வாழ வேண்டுமென்றால் வேறு ஒன்று தேவை.</p>
<p>தீர்க்கமாகச் சொல்லிவிட்டு மௌனமானாள் நந்தா.</p>
<p><span style="color: #888888;">இரா. சம்பந்தன்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1922/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இணையத்தளக் குற்றங்கள்</title>
		<link>http://ezilnila.com/archives/1915</link>
		<comments>http://ezilnila.com/archives/1915#comments</comments>
		<pubDate>Sat, 01 Oct 2011 20:41:31 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1915</guid>
		<description><![CDATA[ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். பூலோகமயமாதலின் விளைவாக நாளுக்குநாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமா ணத்தையும் கண்டுகொண்டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது. ஆம், பேஸ்புக் (Facebook), மை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/skype_facebook1.png"><img class="alignleft size-full wp-image-1917" title="skype_facebook" src="http://ezilnila.com/wp-content/uploads/skype_facebook1.png" alt="" width="150" height="106" /></a>ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.</p>
<p>பூலோகமயமாதலின் விளைவாக நாளுக்குநாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.<span id="more-1915"></span>ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமா ணத்தையும் கண்டுகொண்டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது.</p>
<p>ஆம், பேஸ்புக் (Facebook), மை ஸ்பேஸ் (Myspace), கூகுள் பிளஸ் (Google +), போன்ற சமூக வலையமைப்புகள் பிரபலமடைந்து வருவதுடன் கடவுச்சொல்லை வேட்டையாடும் இணையக் குற்றங்கள் புரிவோரின் களமாகவும் இவை விளங்குகின்றன.</p>
<p>பேஸ்புக் வலையமைப்பானது உலக நாடுகள் பலவற்றில் பிரபல்யமடைந்து வருகிறது. சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம் என்ற கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி &#8216;FB&#8217; இற்கு வந்தால் கூட் டத்தோடு குதூகலிக்கலாம் என்றாகிவிட்டது. நம்மில் பலர் அதிகாலையில் கண்விழித்ததும் முதல்வேலையாக பேஸ்புக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதையே வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>இது இவ்வாறிருக்க, பேஸ்புக் போன்ற சமூக வலைய மைப்புகளில் இடம்பெறும் குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருந்தொகைப் பணத்தை இழந்தோரும் வாழ்க்கையைத் தொலைத்தோரும் இருக்கிறார்கள்.</p>
<p>அவ்வாறு பலரது வாழ்க்கைக்கு பேராபத்தாக உருவாகியுள்ள மின்வெளிப் பயங்கரவாதம் (Cyber terrorism) இன்று உலகையே ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறியுள்ளது.</p>
<p>இதுதொடர்பாக இலங்கையிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) கீழ் இயங்கும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு (CERT) இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் முறைப் பாடுகளுக்கு ஏற்புடைய நடவடிக்கை களையும்மேற்கொண்டு வருகிறது.</p>
<p>இணையத்தளங்களில் மேற்கொள்ளப் படும் குற்றச்செயல்கள் குறித்து முறை யான நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இக்குழு நியமிக் கப்பட்டுள்ளது. இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து இந்தக்குழுவின் சிரேஷ்ட பாதுகாப்பு பொறியிய லாளர்களாகக் கடமையாற்றும் கனிஷ்க யாப்பா, ரொஷான் சந்திரகுப்தா ஆகியோர் பல்வேறு தகவல்களை வீரகேசரியுடன் பகிர்ந்துகொண்டனர்.</p>
<p>இலங்கையில் இடம்பெற்ற சில உண்மைச் சம்பவங்கள்</p>
<p>சம்பவம் 01 கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் இளம் பெண் அவர். அலுவலக நேரங்களில் மாத்திரம் பேஸ்புக் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறே நாட்கள் கடந்தன.</p>
<p>ஒருநாள் தோழியரிடமிருந்து தொலைபேசியில் அவருக்கு கிடைத்த அதிர்ச்சிச் செய்தி இதுதான். &#8220;நேற்றிரவு முழுவதும் பேஸ்புக் இல் இணைப்பில் இருந்தாயே? எங்களோடு அரட்டை அடித்தாயே? இப்போதெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறாய் என்ன?&#8217;</p>
<p>இதனைக் கேட்டதும் அதிர்ச்சிய டைந்துள்ளார் அந்த இளம் பெண். ஏனென்றால் இரவில் அவர் பேஸ்புக் உபயோகிப்பதற்கான எந்த வசதியும் அவரிடம் இல்லை. இதுகுறித்து செய்த முறைப்பாட்டையடுத்து தேடிப்பிடிக் கப்பட்ட உண்மை இதுதான்.</p>
<p>அவருடைய கணனியில் ஒரு மென்பொருள் நிறுவப்பட்டிருந்தது. அந்தக் கணனியில் அவர் என்ன வேலைகள் செய்கிறாரோ அவை அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவாகி இரு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அந்தத் தகவல்கள் அனைத்தும் வேறொரு நபரின் மின்னஞ்சலுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகிரங்கமானதையிட்டு சினம்கொண்டுள்ளார் அந்தப் பெண். இதுபற்றி முழுமையாக விசாரிக்கும்போது அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு நபர்தான் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p>
<p>இவ்வாறான விடயங்களை கணனி உளவுபார்த்தல் என்று சொல்வார்கள். இணையங்களில் குவிந்து காணப்படும் Keylogger போன்றவைற்றைக் கொண்டு கணினிகளையும் செயற்பாடுகளையும் உளவுபார்க்க முடியும்.</p>
<p>சம்பவம் 02 உயர்நிலை பதவி வகிக்கும் முக்கியஸ்தர் அவர். லண்டனில் பெருந்தொகைப் பணம் (12.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவருக்கு அதிர்ஷ்டலாபமாகக் கிடைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ் சலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பணம் கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் பதில் மடல்களையும் அவர் அனுப்பியுள்ளார். &#8220;இந்தப் பணத்தை சட்ட ரீதியாக தங்களுடைய கணக்குக்கு மாற்று வதற்குப் பல்வேறு படிமுறைகள் இருக் கின்றன. ஆவணங்கள், சட்டத்தரணி உத்தரவாதம் என விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பதை தங்களுக்கு அறியத் தருகிறோம்.</p>
<p>அதன் பிரகாரம் ஆவணப் படுத்தல் உட்பட அனைத்து விடயங் களுக்கும் ஒருதொகை பணம் தேவைப் படுகிறது. அதனை எமது கணக்குக்கு வரவு வைப்பதன் மூலம் ஒருவார காலத்துக்குள் உங்களுக்கான அதிர்ஷ்ட லாபப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்&#8217; என அவருக்கு மின்மடலொன்று கிடைத்துள்ளது.</p>
<p>ஒருவார காலத்துக்குள் பெரிய பணக்காரராகப்போகும் ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபா) தனது வங்கிக் கணக்கி லிருந்து மாற்றம் செய்துள்ளார்.</p>
<p>ஒருவாரத்தின் பின்னரும் பணம் கிடைக் காததை கவனித்த அவருக்கு கொஞ்சம் விளங்கத் தொடங்கியது. ஆம்! அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார்.</p>
<p>இவ்வாறான குற்றச்செயல்களை நம்பிக்கை வித்தை மோசடி (Confidence trick &#8211; Scam) எனக் கூறுவார்கள். இவ்வகையான குற்றவாளிகள் பல்வேறு வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடு வதுண்டு.</p>
<p>அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.</p>
<p>பிரபலமான பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இணையத்தளங்களை உருவாக்கும் நபர்கள் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வெளிநாடுகளில் தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்வி கற்பதற்கு குறிப்பிட்டதொரு தொகையை முற்பணமாகக் கோருவதும் உண்டு. வங்கிகளின் பெயர்களில் பெரும் புள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப் பப்பட்டு வங்கிக் கணக்குக்கான கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு கேட்கப்படும். அவ்வாறு கடவுச்சொற்கள் மாற்றிமைக்கப்படும்விடத்து பணம் பறிபோகும் அபாயம் உண்டு.</p>
<p>மின்னஞ்சல், சமூக வலைப் பின்னல்களில் பெருந்தொகை பணப் பரிமாற்றத்துடன் வர்த்தகம் செய்துவரும் நபர்களின் கணக்குகளை அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தகவல் கோருவதுபோல் அனைத்துத் தகவல் களையும் கேட்டுப் பெற்று அதனை மீளக்கையளிப்பதற்குப் பணம் கோரும் சம்பவங்களும் இருக்கின்றன.</p>
<p>சம்பவம் 03 ஜெர்மனியில் திருமணமான இலங்கை நபர் ஒருவர் பேஸ்புக்கினூடாக இலங்கைப் பெண்ணொருவரை காதலித்துள்ளார். இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் ஆழமாகவும் அந்தரங்க விடயங்களைப் பரிமாறுவதாகவும் அமைந்தது. அந்த நபர் தான் திருமண மானவர் என்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது காதலியிடம் கூறவில்லை.</p>
<p>ஒருநாள் இலங்கைக்கு வந்த அவர் தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். சில வாரங் களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு அவர் ஜெர்மனி பயணமானார்.</p>
<p>இந்நிலையில் அவர் திருமணமானவர் என்பதும் இவ்வாறு சில்மிஷங்களைச் செய்வதை பொழுதுபோக்காக் கொண்டி ருக்கிறார் என்பதையும் நண்பர்களினூடாக அறிந்துகொண்டுள்ளார் அந்தப் பெண். அதன் பிறகு தொடர்புகொள்ளவில்லை.</p>
<p>சில மாதங்களுக்குப் பின்னர் ஜெர்மனி நபர் இலங்கைக்கு வந்துள்ளார். மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு தன்னுடன் உணவு அருந்த வருமாறு அழைத்துள்ளார். உடனடியாக மறுப்புத் தெரிவித்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை தெளிவுபடுத்தி தூற்றியுள்ளார்.</p>
<p>அதற்கு ஜெர்மனி நபர் அளித்த பதில் இதுதான் &#8220;நீ என்னோடு அரட்டை அடித் தது, வீடியோ அழைப்பு மேற் கொண்டது, காதல் கதைகள், அந்தரங்க விடயங்களைப் பரிமாறியது என அத்தனை ஆதாரமும் என்னிடம் உண்டு. நீ வராவிட்டால் இவை அத்தனையையும் உனது நிஜப் பெயரோடு இணையத்தளத்தில் தரவேற்றுவேன்&#8217;. இவ்வாறு மிரட்டும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.</p>
<p>இவர்களை இணையக் குற்றவாளிகள் (Internet criminals) எனச் சொல்கிறோம்.</p>
<p>காதலிப்பதாக ஏமாற்றுதல், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்புகளை பதிவு செய்து தரவேற்றம் செய்வதாக மிரட்டுதல், தனிப்பட்டோரின் படங்களைக் கொண்டு போலி யான கணக்குகளை (பேஸ்புக் போன்ற சமூக வலையமைப் புகளில்) உருவாக்குதல், அந்தரங்கங்களை வெளியிடுவ தாக முன்னாள் கணவன்/ மனைவி/காதலன் /காதலியை மிரட்டுதல், உண்மையான உறவு கள் எனக்கூறி கடவுச்சொற்கள் உட்பட அனைத்தையும் பரிமாற் றிக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவையுடன் இவை தொடர்புடைய குற்றச் செயல்களும் இப்போது அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.</p>
<p>சம்பவம் 04 இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண் டவர். அவர் அதனை உபயோகப் படுத்திக்கொண்டி ருக்கையில் அழகான புகைப்படத்துடன் யுவதியொருவர் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு மடல் விடுத்துள்ளார்.</p>
<p>இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிழ்ச்சியில் அவரை இணைத்துக் கொ ண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக் கொண்டுள்ளார். சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற் காகக் காத்திருந்த வேளை அந்தச் சம்பவம் நடந்தது.</p>
<p>தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் அந்தப் பெண். அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் அந்த இளைஞரின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச் சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப் பக்கத்தில் பதிவு செய்தார் அந்த இளைஞர்.</p>
<p>அதன்பின்னர் யுவதியைக் காணவில்லை. அந்த இளைஞரின் பேஸ்புக் கணக்கி ற்குள்ளும் நுழைய முடியவில்லை.</p>
<p>இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இது தான் &#8221; உங்கள் கடவுச் சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடி யும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் எம் மோடு பேசி பணம் செலுத்துங்கள்&#8221;</p>
<p>திட்டமிட்டு மின்னஞ்சல் வழியாக மேற்கொள் ளப்பட்ட கடவுச் சொல்லைத் திருடும் சூழ்ச்சி இது. இவ் வாறான குற்றச் செயல்களை Phishing என்று அழைப்போம். தனிநபர்களையோ அல்லது குழுக்களையோ புண்படுத்தும் நோக்கில் அல்லது அவர்களின் நற்பெ யருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக் கில் செயற்படுதலை மின்வெளித் தொந்தரவு (Cyberstalking) எனக் கூறுவோம்.</p>
<p>இந்தக் குற்றச் செயல்கள் பல்வேறு முறைகளில் கையாளப்படுகின்றன.</p>
<p>மின்வெளிப் பயங்கரவாதம் அல்லது இணையத்தளக் குற்றங்கள் பரந்து பட்டவை. அவற்றில் இலங்கையில் பதிவான முக்கியமான முறைப்பாடுகளில் சிலவற்றையே நாம் இங்கு தந்துள்ளோம். இதுதவிர இன்னும் பல்வேறு குற்றச்செயல்கள் காணப்படுகின்றன.</p>
<p>பூலோகமயமாதலில் பிரதான பங்கினை வகிக்கும் இணையத்தளங்கள், சமூக வலை யமைப்புகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படவேண்டியதே இதனைத் தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் வழியாகும்.</p>
<p>இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?</p>
<p>* தேவையற்ற தொடுப்புகள் (Link), கோப்புகளை சொடுக்கும்(Click) போதும் தரவிரக்கம் செய்யும்போதும் இருமுறை சிந்தித்தல்<br />
* பயனர் கணக்கு, கடவுச் சொற்களை தனிப்பட்ட ரீதியில் பேணுதல்<br />
* தேவையற்ற, தெரியாத நபர்கள் குறித்து கவனமாக இருத்தல் குறிப்பாக சமூக வலைப்பின்னல்களில் போலிப் பெயர்களில் விடுக்கப்படும் அழைப்புகளை தவிர்த்தல்<br />
* போலியான பெயர்களில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு (Antivirus) கோப்புகள் தொடர்பில் அறிந்துவைத் திருத்தல்<br />
* நேர்மையானோரை மாத்திரம் இனங்கண்டு தகவல்களை பரிமாறுதல்<br />
* இணைய வங்கியியலை (Online Banking) மேற்கொள்பவராயின் தனிப்பட்ட கணினியை அதற்கென உபயோகித்தல்<br />
* சமூக வலையமைப்புகளைப்போல வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போலி வலையமைப்புகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல்<br />
* இணையத்தளங்கள், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி அறிதல்<br />
* வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுகையில் அவதானம்<br />
ஆகிய வழிமுறைகளையும் பாதுகாப் பான நடவடிக்கைகளையும் மேற் கொள்வதன் மூலம் குற்றச்செயல்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.</p>
<p>இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.</p>
<p>நடைமுறை உலகில் இளம்பராயத்தினர் தெரிந்தோ தெரியாமலோஇணைய உலகிற் குள் வெகு சீக்கிரமாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனை வருமே இணையக் குற்றங்கள், விதிமுறை கள் குறித்து அறிந்துவைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.</p>
<p>இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை கணனி பயன்பாட் டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம்.தொலைபேசி இலக்கம் 11 269 1692</p>
<p>எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கையில் என்ற கருப்பொருளை வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்ட இணையத்தள, சமூக வலையமைப்புகளை உபயோகப்படுத்துகையில் சிந்திக்க வேண் டியது கட்டாய தேவையாகும்.</p>
<p><span style="color: #808080;">நன்றி: எங்கள் பூமி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1915/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கூகுள் பிளஸ்</title>
		<link>http://ezilnila.com/archives/1907</link>
		<comments>http://ezilnila.com/archives/1907#comments</comments>
		<pubDate>Thu, 30 Jun 2011 12:22:54 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1907</guid>
		<description><![CDATA[இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக “கூகுள் பிளஸ்” என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/Google-Plus-One-img11.jpg"><img class="alignleft size-full wp-image-1909" title="Google-Plus-One-img1" src="http://ezilnila.com/wp-content/uploads/Google-Plus-One-img11.jpg" alt="" width="150" height="85" /></a>இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக “கூகுள் பிளஸ்” என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p>இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.<span id="more-1907"></span></p>
<p>அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.</p>
<p>இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்  கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.</p>
<p>இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.</p>
<p>600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1907/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9</title>
		<link>http://ezilnila.com/archives/1903</link>
		<comments>http://ezilnila.com/archives/1903#comments</comments>
		<pubDate>Sun, 05 Jun 2011 23:23:26 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1903</guid>
		<description><![CDATA[மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/exploer.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-1442" title="exploer" src="http://ezilnila.com/wp-content/uploads/exploer-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். <span id="more-1903"></span>உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில், மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.<br />
இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.<br />
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க, http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.</p>
<p>நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1903/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்!</title>
		<link>http://ezilnila.com/archives/1873</link>
		<comments>http://ezilnila.com/archives/1873#comments</comments>
		<pubDate>Sun, 16 Jan 2011 20:00:53 +0000</pubDate>
		<dc:creator>nila</dc:creator>
				<category><![CDATA[செய்திச்சிதறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://ezilnila.com/?p=1873</guid>
		<description><![CDATA[&#8220;எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்&#8221; - ஜூலியன். பகுதி 1 வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தண்ணியடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் &#8216;விக்கிலீக்ஸ்&#8217; (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://ezilnila.com/wp-content/uploads/WikiLeaks.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-1885" title="WikiLeaks" src="http://ezilnila.com/wp-content/uploads/WikiLeaks-150x150.jpg" alt="" width="145" height="82" /></a>&#8220;எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்&#8221;</p>
<p>- ஜூலியன்.<br />
<span id="more-1873"></span><br />
பகுதி 1<br />
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தண்ணியடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் &#8216;விக்கிலீக்ஸ்&#8217; (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.</p>
<p>விக்கி&#8217; என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.</p>
<p>உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் &#8216;ஆளடி&#8217; அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . &#8216;சர்வ அதிகாரமும் படைத்த&#8217; என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் &#8216;அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்&#8217; என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. &#8216;தொழில்நுட்பம்&#8217;!!!.</p>
<p>&#8216;நாந்தான் அப்பவே சொன்னேன்ல&#8217; என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' /> . விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே &#8216;வெட்டிப் போடும்&#8217; தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.</p>
<p>விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.</p>
<p>விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> , போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்&#8230;.</p>
<p>பகுதி 2</p>
<p>ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, &#8216;ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?&#8217; என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது &#8216;விக்கிலீக்ஸ்&#8217;.<br />
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.</p>
<p>16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே &#8220;It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police&#8221; என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' /> .<br />
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே &#8216;ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்&#8217; என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே &#8216;சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்&#8217; என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். &#8216;வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்&#8217;, இவை ஜூலியனின் உபதேசங்கள்.<br />
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் &#8216;ஓ..ஒரு தெய்வம்&#8230; படி தாண்டி வருதே..&#8217; என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் &#8216;விக்கிலீக்ஸ்&#8217;.</p>
<p>ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக<br />
மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே?, எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.</p>
<p>பகுதி 3</p>
<p>Tor &#8211; The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் &#8216;இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?&#8217; என்றெல்லாம் கேட்கக் கூடாது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' />  <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> .<br />
முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.Tor &#8211; The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் &#8216;இலவச மென்பொருள்&#8217; என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .<br />
Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் &#8216;Relay&#8217; என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.</p>
<p>இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய,<br />
குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.<br />
இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி 4<br />
ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு. நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் &#8221; நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்&#8217; என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் &#8220;நேர்மையான&#8217; போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.<br />
நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. &#8216;இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை &#8216; இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது&#8217;, இல்லை இல்லை &#8216;அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை &#8216;அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்&#8217; என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.</p>
<p>ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.<br />
பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' /> ). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி 5<br />
எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் &#8216;நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. &#8216; என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி. முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.<br />
அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே செல்லவும் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.. அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி 6<br />
அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.</p>
<p>ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. &#8220;நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்&#8221;, இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.<br />
ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது. அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. &#8216;பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்&#8230;&#8217; என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். &#8220;உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்&#8221; என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. &#8216;சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்&#8217; என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் &#8220;அறிவு&#8221;க்கும் பெயர் போனவர். இவரின் &#8216;புத்தி&#8217;சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' /> . சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?&#8230; அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி 7<br />
அமெரிக்க அரசாங்கம் சாரா பாலின் குறித்து கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் இருந்தது உண்மை. காரணம் ஊரெல்லாம் வளைய வரும் ஜூலியன், நாளை நம் மடியில் கை வைத்தால் என்ன செய்வது என்ற கவலைப் பட்டு தாடி வளர்த்துக் கொண்டிருந்தனர். கவலைப்படுவதோடு நின்று கொள்ளாமல் ஜூலியனை முழுமையாக சி.ஐ.ஏ உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. சுற்றிலும் நடப்பது குறித்து ஜூலியன் உணர்ந்தே இருந்தார். இது வரை ஜூலியன் நடத்திய அனைத்துப் பரிசோதனை முயற்சிகளுமே வெற்றியே. சட்ட ரீதியாக யாரும் அவரது சட்டையைக் கூடத் தொட முடியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறதென்றாலும் மனதுக்குள் ஜூலியனுக்கு ஒரு கவலை. காரணம், ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் &#8220;இதெல்லாம் எப்ப்டிண்ணே உங்களுக்கு மட்டும் சிக்குது&#8221; எனக் கேட்கும் போதெல்லாம், &#8220;அது ராமசாமி கொடுத்தது&#8230;. இது கந்தசாமி கொடுத்தது&#8230;&#8221; என்பதே வழக்கம். ஜூலியனின் சுழியை அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத் தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட ரீதியாகத் தன்னைப் பாதுகாக்கி &#8216;விக்கி&#8217; எனும் இணையச் சித்தாந்தத்தினைக் கேடயமாக்குகிறார் என்றெல்லாம் குரலெழுப்பித் தங்கள் முகமும் ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் ஜூலியனும் சி.ஐ.ஏவும் பங்காளிகள், தங்களின் எதிரிகள் மீது திட்டமிட்டுத் தாக்குவதற்கு ஜூலியனைப் பகடைக்காயாக்குகிறது, அமெரிக்காவின் உளவுத்துறை என்று கூறி அமெரிக்காவின் சுப்பிரமணியசாமியாகினர்.இதற்கெல்லாம் ஜூலியனுக்குப் பதிலளிக்க நேரமில்லை. தனதுக் கடைசி விஷப்பரிட்சையாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையோடு லேசாக உரசிப் பார்த்து விட்டு, பின்பு முழுத் தாக்குதலையும் தொடங்கலாம் என்பது தான் அடுத்தகட்ட நகர்வு.அத்திட்டம் ஜூலியன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒருசேரப் புறந்தள்ளியதுடன், அப்போது வெளிவந்த ஆவணம் உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இம்முறை தான் தங்கியிருந்து செயல்பட ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடு ஐஸ்லாந்து, முதல்முறையாக கூடவே இருந்து நடப்பதையெல்லாம் கண்டுகளிக்கப் பார்வையாளராக அமெரிக்காவின் நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். அப்பத்திரிக்கையாளரின் ஜூலியனுடான ஐஸ்லாந்து அனுபவங்கள் கட்டுரையாக வெளிவந்து மிகப்பெரியத் தாக்கத்தை உண்டு பண்ணியது, ஜூலியன் எதிர்பார்த்தது போலவே <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> . அடுத்த பகுதியில் தொடரும்&#8230;.</p>
<p>பகுதி 8<br />
அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). ஈராக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம். விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை &#8216;நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்&#8221; என்று டிவிட்டியது தான். ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு &#8220;எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக&#8221; என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.<br />
அடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.<br />
அனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, &#8216;காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?&#8221;.. பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது &#8220;collateral murder&#8221;. விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.யாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில்?. எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற &#8220;reuters&#8217; செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. ஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, எடுத்தது யார், விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார் ? இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் &#8216;தன் கையே தனக்கு உதவி&#8217; முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது&#8230; அடுத்த பகுதியில்&#8230;</p>
<p>பகுதி 9</p>
<p>விக்கிலீக்ஸ் வரலாற்றில் collateral murder காணொளி வெளியீடு ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. அதுவரை வெறும் உலக அரசியல் விமர்சகர்களாலும், சக பத்திர்க்கையாளர்களாலும் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த ஜூலியன், இப்போது மனித உரிமை, உலக அமைதி போன்ற விஷயங்களுக்காகச் செயல்பட்டு வரும் குழுமங்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளுக்கு புதிய ஊடக ஒழுங்குமுறை சட்டத்திருத்தங்களுக்கான கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு ஜூலியன் விஸ்வரூபமெடுத்திருந்தார்.<br />
மழைக்காலத்தில் நம்மூர் தெருக்களில் ஆடைகளில் மழைநீர் பட்டுவிடாமல் கவனமாக நடப்பது போல், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களைக் கொடுப்பவர்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவராமல் பார்த்துக் கொள்வதே விக்கிலீக்ஸ் தளத்திற்கான பலம் என்பது புரிந்தே இருந்தது. இதன் காரணமாக பலரும் ஜூலியன் தானே ஹேக் செய்து வெளியிட்டு விட்டு, விக்கிலீக்ஸ் மூலம் தன் கல்யாணத்திற்குத் தானே மேளம் அடித்துக் கொள்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலை கொள்வதற்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை. ஆனால் இதையெல்லாம் தகர்ப்பதைப் போல ஒரு நாள் நள்ளிரவில் collateral murder காணொளிக் காட்சி உட்பட பல இராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் தளத்திற்கு அனுப்பி வைத்ததாக பிராட்லி என்னும் 22 வயது அமெரிக்க இராணுவ வீரர் ஈராக் இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டு, குவைத்தில் வைத்து விசாரித்து வருவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்து விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை அவதானித்து வருபவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.<br />
ஜூலியனைத் தவிர அனைவரும் விக்கிலீக்ஸ் தளத்தின் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சிறிதே கவலை கொண்டிருந்த வேலையில், பிராட்லி தானே முன்வந்து இணைய அரட்டையில் குறுகிய காலத்திற்கே அறிந்திருந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் ஹேக்கிங் நிபுணருமான அட்ரியன் என்பவரிடம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு தான் அனுப்பிய விவரங்கள் குறித்து சிலாகித்துச் சிலிர்த்து வைக்க, அட்ரியன் அதை அப்படியே அமெரிக்க அரசாங்கத்திடம் புட்டு வைக்க, பிராட்லி கைது செய்யப்பட்டார். இன்றளவும் அமெரிக்க இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் பிராட்லி மீதுள்ள குற்றச்சாடுகளுக்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர்கள் இருவரை பிராட்லிக்காக வாதிட விக்கிலீக்ஸ் சார்பில் நியமித்தாலும், அமெரிக்கா அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. இதுநாள் வரை விக்கிலீக்ஸ் தளத்தின் சார்பாக, பிராட்லி தான் தங்களுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தாக எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும், விக்கிலீக்ஸ் தளத்தின் மீதோ அல்லது ஜூலியன் மீதோ பெரிதாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பிராட்லியின் கைதுக்குப் பிறகு &#8216;நாந்தான் அப்பவே சொன்னேன்ல..தனியாளா இவ்வளவு பண்ண முடியுமா&#8230;இவனுக்கு இதெல்லாம் யாரோ அனுப்புறாங்கய்யா&#8230;&#8221; என்ற குரல்கள் பரவலாக எழுந்தடங்கியது.<br />
அனைத்து சோதனை முயற்சிகளும் வெற்றியில் முடிந்த திருப்தியில், ஆப்கன் போர் குறிப்பு வெளியீடுகளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த ஜூலியனுக்கு, பிராட்லியின் கைது பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. என்றுமே தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ தொல்லைகள் வரும்போது ஜூலியன் அமைதி காத்ததே கிடையாது, சீண்டச் சீண்டச் சீறுவதே ஜூலியனின் கொள்கை. பிராட்லியின் கைது, எங்கு சென்றாலும் உளவாளிகளின் நோட்டம் என்று கடுப்பாகி போன ஜூலியன் திட்டமிட்டதைக் காட்டிலும் விரைவாக ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்டு அமெரிக்காவிற்கு வெறியேற்றியிருந்தார். இதுவரை போராடிப் பார்த்த அமெரிக்கா, தொழில்நுட்பத்தில் ஜூலியனுடன் மோதி வெற்றி பெற முடியாதென்பதை உணர்ந்திருந்த அமெரிக்கா, ஜூலியனுக்காக வேறொரு திட்டம் வைத்திருந்தது. தன் எதிரிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே இருப்பதும், அவர்களை தன் விக்கிலீக்ஸ் வெளியீடுகளாலேயே அடக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த ஜூலியன் அடுத்து அமெரிக்காவிற்காக வைத்திருந்த அதிரடி அணுகுண்டு தான் Cablegates என்றழைக்கப்படும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்களின் வெளியீடு. ஆனால் அவற்றைத் தயார்ப்படுத்துவதற்கு ஜூலியனுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. அந்த சில மாதங்கள் இடைவெளியில் ஜூலியனின் வாழ்வில் மீண்டும் வசந்தகாலம் எட்டிப்பார்த்தது. அதுவரை துணைவியில்லாத, தனிமையான, ரகசிய இருப்பிடங்களில் பதுங்கித் திரியும் வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருந்த ஜூலியனுக்கு collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க்குறிப்புகள் வெளியீடுகளுக்குப் பின் அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படும் நாயகன் அந்தஸ்து கிடைத்திருந்தது.அந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், தொலைக்காட்சிப் பேட்டிகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். சென்ற இடமெல்லாம் சிறப்பு வரவேற்பும், இளம் சமுதாயத்தின் ஆரவாரமும் ஜூலியனுக்கு உற்சாகமூட்டியது. இக்காலகட்டத்தில் ஸ்வீடனில் ஒரு தேவாலயக்குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது தான் ஜூலியன் என்னும் சிங்கம், இரண்டு புள்ளிமான்களால் சாய்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்தேறியது. &#8216;சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே &#8211; நாகராஜ்&#8217; போன்ற வாசகங்களைக் கொண்ட ஆட்டோக்களைத் தன் வாழ்நாளில் பார்த்துமறியாத ஜூலியனுக்கு ஸ்விடனில் நடந்த அசம்பாவிதம் என்ன? என்ன? என்ன? விரிவாக அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி 10</p>
<p>&#8216;நான்கு மாதங்களுக்கு முன்பு&#8217; என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை &#8220;போரும், ஊடகங்களின் பங்கும்&#8221; என்ற தலைப்பில் இணையத்தின் போர்வாள் ஜூலியன் சிறப்புரையாற்றுகிறார், அலைகடலென வாரீர் என்று ஸ்விடன் முழுக்க விளம்பரப்படுத்தியாகி விட்டது. இப்பயணத்திற்காக ஜூலியனிடம் ஸ்விடனைச் சேர்ந்த ஒரு தேவலாயக் குழுமத்தின் ( Sweden association of Christian social democrats) செயலாளரும், ஊடகத் தொடர்பாளாருமான அன்னா (anna ardin, age: &#8220;31&#8243; ) தொடர்பு கொண்ட பொழுது ஜூலியனின் ஒரே நிபந்தனை, தனக்கு தங்குவதற்கு ரகசியமான இடம் வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியான நேரமது என்பதால் ஜூலியனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.</p>
<p>அந்நேரத்தில் ஜூலியன் என்ன கேட்டாலும் செய்து கொடுத்து தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதற்கு பலரும் வரிசை கட்டி நிற்கும் காலமது என்பதால், தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி நாட்களில் தனக்கு வேறொரு முக்கிய வேலை காரணமாக, தான் வெளியூர் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்றே திரும்புவதால் தனக்கு எந்த வித தொந்திரவும் இல்லை என்றும் தயங்காமல் சொல்ல, ஜூலியனும் சம்மதித்தார். ஸ்விடன் சென்றதும் அனைத்தும் சொன்னபடி நடக்க நிதானமாக இருந்த ஜூலியன் எனும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்பாராதவிதமாக (?) சென்ற வேலை முடிந்த காரணத்தால் நிகழ்ச்சிக்கு முதல் நாளே திரும்பி வந்த அன்னாவைக் கண்டதும் கரையைக் கடந்தது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . இருவரும் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை குறித்து சிறு விவாதத்திற்குப் பிறகு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.<br />
இன்றையத் தேதிக்கு உலகிமே அண்ணாந்து பாக்கும் ஒரு நபர், இணையத்தின் புரட்சி நாயகன், அட்டகாசமான தோற்றமும், தொழிநுட்ப அறிவும் கொண்ட ஒருவருடன் தனியே தங்கும் வாய்ப்பு. செல்லுமிடமெல்லாம் ஜூலியனின் வலையில் சிக்குவதற்காக பெண்கள் தாங்களே கையில் வலையுடன் காத்திருந்த தருணத்தில், ஜூலியன் அன்னாவை நோக்க, அன்னா ஜூலியனை நோக்க..மேற்கத்தியக் கலாச்சாரத்தின் சம்பிரதாய வைபவங்கள் இருமன விருப்பத்துடன் இனிதே அரங்கேறின. இடையில் ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும், சற்றேத் தயங்கிய அன்னா பின் உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்ததும் சரித்திர நிகழ்வுகள். மறுநாள் ஜூலியன் உரையாற்றும் நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது. நிகழ்ச்சியின் போது எல்லாரும் ஜூலியனைப் பார்க்க, ஜூலியன் மட்டும் முதல் வரிசையில் இருந்த ஒரு பிங்க் ஸ்வெட்டரையே அவ்வப்போது கவனிக்க, அங்கு ஒரு பூந்தோட்டமே பூத்துக்குலுங்கியது. பிங்க் ஸ்வெட்டரின் பெயர் சோபியா, வயது 26. நல்ல நேரத்திலும் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' />  ஒரு கெட்ட நேரமாக, ஒரே நேரத்தில் பல மைதானத்தில் விளையாட ஆசைப்பட்ட ஜூலியன், நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தின் போது சோபியாவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.அன்றிரவு ஜூலியனுக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்தளித்த அன்னா, அதனை மகிழ்ச்சியோடு ட்விட்டரில் &#8220;உலகின் மிகச்சிறந்த, புத்திசாலியோடு இருக்கிறேன்&#8221; என்று பதிவு செய்தார். விருந்தோடு விருந்தாக சோபியாவிடம் தொலைபேசிய ஜூலியன், மறுநாள் அன்னாவிற்கு போக்குக் காட்டி விட்டு, மல்லிகைப்பூ, அல்வா சகிதம் சோபியாவை சந்திக்கச் சென்றார். அங்கும் இரவும் மறுநாள் காலையும் உணவோடு, உறவும் பரிமாறப்பட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு ஆணுறை பயன்படுத்திய ஜூலியன், காலை சிற்றுண்டிக்கு எதுவும் பயன்படுத்தவில்லை. முதலில் தயங்கிய சோபியா, பின்னர் தடுக்கவில்லை. அன்னாவின் வீட்டிற்குத் திரும்பிய ஜூலியன், பின்னர் ஸ்விடனை விட்டு வெளியேறி, விக்கிலீக்ஸ் தளத்தின் அடுத்த வெளியீட்டுக்கான (cable gates) வேலைகளில் ஆழ்ந்தார். இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. சோபியாவிற்கு மட்டும் ஜூலியனுடனான தனது காலைச் சிற்றுண்டி குறித்து மனக்கவலை(STD) இருந்து கொண்டே இருந்தது, அன்னாவுடன் தானே தங்கியிருந்தார் ஜூலியன், அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, அதுவரை தனக்கு மட்டும் தான் கிடைத்தது என்ற கர்வம் கலகலக்க, கலவரம் பிறந்தது. ஸ்விடன் நாட்டு சட்டத்தின் படி அன்னா வழக்குத் தொடர்ந்தார், முதலில் விசாரித்த நீதிபதி வழக்கினைத் தள்ளுபடி செய்ய, பின்னர் மேல்முறையீட்டின் படி வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கும், ஜூலியனின் கைதுக்கும் உத்தரவிடப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் தகவல் வந்த தருணத்தில், ஒட்டு மொத்த இணைய உலகமும் அந்த பெண்களின் புகைப்படங்களைத் தேடித் தேடி ஓய்ந்தது உபதகவல் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .இனி நடந்தவைகளின் சிக்கலான பக்கங்களைப் பார்ப்போம். ஸ்விடன் பெண்ணுரிமைக்குக் கட்டற்ற சுதந்திரமும், செல்லமும் கொடுக்கும் இடமென்பதால் இயற்கையாகவே &#8216;பம்மல் K. சம்பந்தம்&#8217; சிம்ரன்கள் நிறைந்த நாடு. ஆணுறை இல்லாமல் உறவு கொண்டாலோ அல்லது உணர்ச்சி வேகத்தில் தடுக்க முடியாமல் போனாலோ, அடுத்த வாரம் ஆற,அமர வழக்குத் தொடுக்கலாம் (ஸ்விடன் செல்லும் அன்பர்கள், கவனம் <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':D' class='wp-smiley' />  ). மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இல்லை அதெல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தது, இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.இந்த வழக்குப் பிரச்சினை உச்சத்திற்கு வருவதற்குள் &#8216;Cable gates&#8217; எனப்படும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அனைத்து ஆவணங்களும் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. ஒன்று அமெரிக்காவின் அனைத்து தூதரகங்களும் தாங்கள் செயல்படும் நாடுகளை வேவு பார்க்கின்றன. இரண்டு அந்தந்த நாட்டுத் தலைவர்களை முள்ளம்பன்னித் தலையா, டப்பாத் தலையா என்று கவுண்டமணியே கூசும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் விளித்திருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளின் ஒற்றுமையின் மீதானத் தாக்குதல் என்றெல்லாம் ஹிலாரி ஊடகங்களில் ஒருபுறம் கபடியாடிக் கொண்டே, மறுபுறம் ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து &#8216;அதெல்லாம் டூப்ளிக்கேட்டு.. ஏமாத்துறான்..நம்பாதீங்க&#8221; என்றெல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தார். முதல் முறையாக வரலாற்றில் அமெரிக்காவை சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்த ஜூலியனை, ஸ்விடனின் சிற்றின்ப வழக்கு விவகாரங்கள் துரத்த, விக்கிலீக்ஸ் குழுவின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி ஜூலியன் இங்கிலாந்து பறந்தார். விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க தனது சகல அதிகாரங்களயும் பிர்யோகிக்க ஆரம்பித்திருந்தது அமெரிக்கா.அமெரிக்காவின் முயற்சிகளை மீறி விக்கிலீக்ஸ் தளம் எவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறது, ஜூலியன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்ணணி என்ன? இது சம்பந்தப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டா அல்லது அமெரிக்காவின் அரசியல் சதியா?, அதற்கான தொடர்புகள் குறித்த அலசல்கள், இங்கிலாந்து சென்ற பின் ஜூலியனுக்கு நடந்தவை ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.</p>
<p>பகுதி11<br />
ஒரு ஆதிக்கம் மிகுந்த நாட்டின் அரசாங்கம் நினைத்தால் சரியோ, தவறோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தான செயல்முறை விளக்கமும், இணையத் தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நினைத்தால் ஒரு கணிணியையும், இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு யாரையும் அலறியடித்து ஓட வைக்க முடியுமென்பதும் சிறப்புற நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஜூலியன் இங்கிலாந்திற்கு ஆறு மாத விசாவில் வருகை தந்திருக்கிறார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் புதிது, புதிதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் அனுதினமும் அம்பலமாகிக் கொண்டே இருந்தன. மறுபக்கம் ஸ்விடன் அரசு இண்டர்போல் அமைப்பை அணுகி தங்களிடம் ஒரு பிராது இருக்கிறதென்றும், அது குறித்தான பஞ்சாயத்துக்கு உடனே ஜூலியனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தது. இண்டர்போல் ஜூலியனைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசை அணுகிய போது, ஆவணங்களில் ஜூலியனின் பெயர்க்குறிப்பில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டுபிடித்து சிலிர்த்துக் கொண்டு நிராகரித்து விட்டது. ஆவணங்களைத் திருப்பி ஸ்விடனிடம் கொண்டு போய் திருத்தி எழுதிக் கொண்டு வர இண்டர்பொல் அமைப்பிற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், ஜூலியனை எங்கே போய் பிடிப்பதென குழம்பினர். இந்த இடைவெளியை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா &#8216;நாந்தான் இருக்கேன்ல&#8217; என்று களத்தில் குதித்தது.பொதுவாக ஒரு இணையதளத்தின் பெயர் என்பது தனி விஷயம் (domain name), அந்த இணையத்தளத்திற்கானக் கோப்புகளை அல்லது தகவல்களை வைத்திருக்கும் கணிணி/வழங்கி என்பது தனி விஷயம் (hosting server). இந்த இரண்டையும் கோர்த்து விடும்போது தான் நீங்கள் உங்கள் உலாவியில்(browser) இணையதளத்தின் பெயரை உள்ளிட்டதும் அத்தளத்தின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இணையதளத்தின் பெயரும் அதன் கோப்புகளைக் கொண்ட வழங்கி பற்றிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் தான் இணையதளப் பெயர் வழங்கி (DNS &#8211; Domain Name Servers). இந்த DNS வழங்கிகள் செயல்படும் விதம் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். கடந்த மூன்று வருடங்களாக ஜூலியன் அமைத்திருந்த உலகளாவிய விக்கிலீக்ஸ் ஆர்வலர்களின் வலையமைப்பினையும், அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு, எல்லாமே ஜூலியன் ஒரு ஆள் தான் என்று நினைத்த அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக நேரிடையாக, உலக மக்கள் அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை ஜூலியனை நோக்கி பிரயோகித்து, விக்கிலீக்ஸ் எனும் தேன்கூட்டில் கை வைத்தது.விக்கிலீக்ஸ் தளத்திற்கென்று உலகெங்கும் பல நிறுவனங்களிடமும் கோப்புகளை சேமித்து வைத்து தங்கள் இணைய தளத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக வழங்கி சேவைகளை (hosting servers) பெற்றிருந்தார்கள். அதன் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலுள்ள வழங்கிகள் மூலமே விக்கிலீக்ஸ் தளத்தினை எளிதாக, விரைவாக பார்வையிட முடியும். விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சில ஏற்பாடுகள் செய்து வைக்கப்படும். முதல் காரணம், ஒரு இடத்தில் தளம் முடக்கப்பட்டால் மறு இடத்தில் வேலை செய்யும். இரண்டாவது, கூட்டம் கும்மும்போது இணையப் போக்குவரத்து அதிகமாகி தளம் செயல்பட முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் இணையப்போக்குவரத்தினை பல்வேறு கோப்பு வழங்கிகளுக்கும் பிரித்தனுப்பி சமாளிக்க முடியும். இதற்குள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸ் தளத்தினை அல்-குவைதா, பின் லேடன் அளவிற்கு அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவின் மீதான இணையத் தாக்குதல் என்றெல்லாம் குரலெழுப்பி கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்காமலும், ஆதரிக்காமலும் இருப்பது தான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு பிரச்சாரம் செய்து தங்கள் முகங்களை ஊடகங்களில் காண்பித்து மகிழ்ந்தார்கள். இதையே வாதமாக வைத்து அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியால் விக்கிலீக்ஸ் தள்த்திற்கான அனைத்து DNS சேவைகளும் முடக்கப்பட்டன, உலகப் புகழ்பெற்ற அமேசான் (Amazon.com) நிறுவனம் விக்கிலீக்ஸ் தளத்திற்காக தாங்கள் வழங்கி வந்த கோப்பு வழங்கிகளுக்கான(hosting server) சேவையினை நிறுத்தியது. இனி யாரும் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்க முடியாது என்று நினைத்து சரக்கடித்து கொண்டாட எத்தனிக்கும் முன்னரே தங்கள் தளத்தினை 30க்கும் மேற்பட்ட வெவ்வெறு புதிய இணையதள முகவரிகள் மூலம் பார்க்கலாம் என்று விக்கிலீக்ஸ் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டது. 30 முகவரிகள், நூறாகி, நானூறாகி, இன்றைய தேதியில் ஐநூறுக்கும் மேலான இணைய தள முகவரிகளின் மூலம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் களைகட்டிய வேகத்தினைப் பார்த்து அமெரிக்கா திகைத்துப் போனது.<br />
ஊரெல்லாம் ஊடக சுதந்திரத்திற்கு ஊர்வலம் போகும் அமெரிக்காவில் ஒரு ஊடக நிறுவனம் (அமேசான்) எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டவே அந்நிறுவனத்திடம் வழங்கிச் சேவையினைப் பெற்றிருந்தோம் என்று ஜூலியன் அலட்சியமாக சொல்லி வைக்க, அமெரிக்காவின் இரத்த அழுத்தம் மேலும் எகிறியது.</p>
<p>ஒரே நேரத்தில் இத்தனை முகவரிகளில்(mirrored sites) எப்படி விக்கிலீக்ஸ் தளம் விரைவாக செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜூலியனின் கைது, கைதுக்கு எதிரான போராட்டங்கள், பின் பிணையில் வெளிவந்தது ஆகியவை அடுத்தப் பகுதியில்.</p>
<p>பகுதி 12</p>
<p>Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative link). இதைச் சாத்தியப்படுத்துவதற்கு வழக்கம் போல் இணையமெங்கும் மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன, வழக்கம் போல் கூகுளாடி பெற்றுக்கொள்ளலாம். (உதா: HTTrack ). இவ்வாறு பிரதிபலிக்கும் தளங்களைத் (mirrored sites) தயார் செய்வதற்குத் தேவையானப் பொருட்கள் பிரதிபலிக்கச் செய்யும் மென்பொருள், உங்களுக்குச் சொந்தமாக இணைய வழங்கியில் கோப்புகளைச் சேமிக்க இடம், மற்றும் அசல் இணையதளத்தின் இணைய வழங்கியின் விவரங்கள் (hosting servers).</p>
<p>மேற்சொன்ன விவரங்களை, பிரதிபலிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு இயங்க விட்டுவிட்டால், அதன் பின்னர் நம் மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விடலாம். அந்த மென்பொருள் என்ன தான் செய்யும்?. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அசல் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும், பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அசல் தளத்தில் ஏதேனும் புதிய கோப்புகள் வலையேற்றப்பட்டிருந்தாலோ அல்லது இருந்த கோப்புகள் நீக்கப்பட்டிருந்தாலோ அதே மாற்றங்களை பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் செயல்படுத்தும்(Sync.). விக்கிலீக்ஸ் ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அவர்களுக்கும் இணைய வழங்கிகள் கோப்புகளைச் சேமிக்க இடம் வைத்திருப்பதென்பது நம்மூரில் கேபிள் இணைப்பைப் போல, சகலரும் வைத்திருப்பார்கள்.</p>
<p>விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்கி விட்டோம் என்று அமெரிக்கா ஊடகங்களில் உரத்துக் கூவிக் கொண்டிருந்த பொழுதுகளில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலர்கள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் விக்கிலீக்ஸ் தளத்தின் நகல்கள் நூற்றுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரதிபலிக்கப்படும் தளங்கள் யாவும் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நாடுகளின் வழங்கியில் சேமிக்கப் பட்டதென்பதும், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்தின் படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது மிகக் குஷ்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றளவும் பல நாடுகளில் இணையத்தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போதிய சட்டங்கள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இவையனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளைகளில் ஜூலியனைக் கைது செய்ய லண்டன் மாநகரக் காவல்துறை முயற்சி செய்ததும், ஒவ்வொரு நாளும் புதிதாகச் சில ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தின் மூலமாக வெளியிடப்படுவதும் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தன. தளத்தையும் முடக்க முடியவில்லை, ஆளையும் பிடிக்க வைக்க முடியவில்லை என்று குமுறிய அமெரிக்காவிற்குத் தினமும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த ஆவணங்களின் கொசுத் தொல்லையும் சேர்ந்து தாங்கொனாத் துயரமடைந்து, ஜூலியனை நோக்கித் தன் இறுதி தாக்குதலை நடத்தியது. ஜூலியன் பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், Paypal தளத்தின் கணக்குகள், VISA மற்றும் MasterCard கடன் அட்டைகள் என சகலமும் முடக்கப்பட்டன. விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகளுக்கும், ஜூலியன் இணையத்தில் ஆடும் கண்ணாமூச்சிகளுக்கு பணம் ரொம்ப, ரொம்ப அவசியம். விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் அவர்களுடன் சேர்ந்து வெளியிடும் அமெரிக்க, ஐரோப்பிய அச்சு ஊடகங்கள் மூலம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு நிதி அளிக்கப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டாலும்,ஜூலியனின் முக்கிய நிதி ஆதாரம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு, Paypal மூலம் நன்கொடை வழங்குபவர்கள் தான். தனது ஜீவநாடியான நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதும், இனி மறைந்திருந்தும் உபயோகமில்லை என்பதை உணர்ந்த ஜூலியன், தனது வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நிகழ்ந்தது. ஊரையே உலையில் போட்டு விட்டு மலர்ந்த முகத்துடன், பூரித்துப் போய் சிறை செல்லும் இக்காலத்தில், எந்தவித உணர்வையும் காட்டாமல் சரணடைந்த ஜூலியன், சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்கிலீக்ஸ் வழக்கம் போல் செயல்படும் என்று சொல்லிச் செல்ல ஜூலியன் மறக்கவில்லை. அதுவரை ஜூலியனால் எதுவும் சாத்தியம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.<br />
இக்கோபத்தின் வெப்பம் அப்படியே ஜூலியனை முடக்கியவர்களிலேயே முக்கியமானவர்களான VISA மற்றும் MasterCard பக்கம் திரும்பியது. வெறும் கணினியும், இணைய இணைப்பும் வைத்துக் கொண்டு சிறிய அறைக்குள் செயல்படும் இவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தவர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் வகையிலான இணையப்போர் நடந்தது. பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, &#8220;Operation Payback&#8221; என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது. DDoS attack என்ற இணையக் குட்டிச்சாத்தான், VISA மற்றும் MasterCard இணையத் தளங்களின் மேல் ஏவி விடப்பட்டது. DDoS (Distributed Denial of Service) தாக்குதல் என்பது அரசியல் கட்சிகள் ஊர்வலம் சென்று சாலைகளை முடக்குவதைப் போலத் தான். சும்மா இருக்கும் இணையத்தளத்தினை நோக்கி பல்வேறு கணினிகளில் இருந்து ஏகப்பட்ட தகவல் இணைப்புகளை அனுப்பி போலியான இணையப் போக்குவரத்தினை அளவுக்கு மீறி ஏற்படுத்துவதன் கொடுமை தாங்காமல், தாக்குதலுக்கு உள்ளாகும் இணைய தளத்தின் வழங்கிக் குப்புறப் படுத்துக் கொள்ளும். இத்தாக்குதலை தொடுப்பதற்கென சிறப்பு மென்பொருட்கள் உள்ளன.இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும், இலவச இணைப்பாக amazon நிறுவனத்தின் இணையத்தளத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அத்தளம் வெற்றிகரமாக சமாளித்தது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், சந்தடி சாக்கில் விக்கிலீக்ஸ் தளத்தின் மீதும் DDoS தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அத்தாக்குதல் சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது <img src='http://ezilnila.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்&#8230;</p>
<p>பகுதி 13<br />
இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.</p>
<p>அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் &#8220;நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன&#8221; என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.</p>
<p>இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் &#8216;உள்ளேன் ஐயா&#8217; சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.</p>
<p>ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.</p>
<p>மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.</p>
<p>&#8220;எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்&#8221; &#8211; ஜூலியன்.</p>
<p><span style="color: #808080;">இது வரை தொடர்ந்து இவ்வளவு எழுத சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. ஒரே ஒரு சிறிய பதிவிடலாம் என்று எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி தொடங்கப்பட்ட இத்தொடர் இவ்வளவு தூரம் நீண்டதற்கு தொடர்ந்து ஊக்கமளித்த நீங்களனைவருமே காரணம். உங்கள் பின்னூட்டங்களும், அறிவுரைகளுமே கம்பெனியின் சோம்பலை விரட்டியடித்து, இயங்க வைத்ததென்பது குறிப்பிடத் தக்கது. ஜூலியன் ஒரு வாழும் வரலாறு என்பதாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆளென்பதாலும், குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஜூலியன் குறித்து நிச்சயம் எழுத முயற்சிக்கப்படும்.</span></p>
<p>நன்றி: சுடுதண்ணி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://ezilnila.com/archives/1873/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
